சிறப்பு ஆசிரியர்கள் பணியிடம் நிரப்ப பதிவு மூப்பு பரிந்துரை - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 25, 2015

சிறப்பு ஆசிரியர்கள் பணியிடம் நிரப்ப பதிவு மூப்பு பரிந்துரை

மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு ஆசிரியர் காலி பணியிடங்களுக்கு மாநில அளவிலான பதிவுமூப்பு பரிந்துரைக்கப்பட உள்ளது. தகுதியுடையோர் சிவகங்கை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் அக்.,28 இல் பதிவு மூப்பு சரி பார்க்கலாம்.இது குறித்து சிவகங்கை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் சுப்பிரமணியன் கூறியது:


செவித்திறனற்ற மாணவருக்கான 31 இடைநிலை ஆசிரியர் பதவிகளுக்கு இடைநிலை ஆசிரியர் பட்டயம், ஆசிரியர் தகுதித் தேர்வு தாள்-1 இல் தேர்ச்சி மற்றும் செவித்திறனற்ற மாணவருக்கான ஆசிரிய பயிற்சியில் இளநிலைப் பட்டயச் சான்று பெற்றிருக்க வேண்டும். பார்வையற்ற மாணவருக்கான 31 இடைநிலை ஆசிரியர் பதவிக்கு இடைநிலை ஆசிரியர் பட்டயம், ஆசிரியர் தகுதித் தேர்வு தாள்-1 இல் தேர்ச்சி மற்றும் பார்வையற்ற மாணவருக்கான ஆசிரிய பயிற்சியில் இளநிலை பட்டயச் சான்று பெற்றிருத்தல் வேண்டும். பார்வையற்ற மாணவருக்கான,11 பட்டதாரி ஆசிரியர் காலிப் பணியிடத்திற்கு பி.ஏ. அல்லது பி.எஸ்.சி., அல்லது பி.லிட்.,பட்டப்படிப்புடன் ஆசிரியர் தகுதித் தேர்வு தாள்-2 இல் தேர்ச்சி மற்றும் பார்வையற்ற மாணவருக்கான ஆசிரிய பயிற்சியில் முதுநிலை பட்டயச் சான்று பெற்றிருத்தல் வேண்டும்.


செவித்திறனற்ற மாணவருக்கான, 19 பட்டதாரி ஆசிரியர் காலி பணியிடங்களுக்கு பி.ஏ., அல்லது பி.எஸ்.சி., அல்லது பி.லிட்., பட்டப்படிப்புடன் ஆசிரியர் தகுதித் தேர்வு தாள்-2 இல் தேர்ச்சி மற்றும் செவித்திறனற்ற மாணவருக்கான ஆசிரிய பயிற்சியில் முதுநிலை பட்டயச் சான்று பெற்றிருக்க வேண்டும்.விடுதி காப்பாளர் பணி : மேலும் துணை விடுதி காப்பாளர் பணியிடத்திற்கு இடைநிலைஆசிரியர் பட்டயச் சான்றுடன், பார்வையற்ற மாணவருக்கானருக்கான ஆசிரிய பயிற்சியில் இளநிலைப் பட்டயச் சான்று பெற்றிருக்க வேண்டும். அதேபோல், துணை விடுதிக் காப்பாளர் காலியிடத்திற்கு இடைநிலை ஆசிரியர் பட்டயச் சான்றுடன் செவித்திறனற்ற மாணவருக்கான ஆசிரிய பயிற்சியில் இளநிலை பட்டயச் சான்று பெற்றிருக்க வேண்டும் என்றார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி