செல்வமகள் சேமிப்பு கணக்கு தொடங்க சலுகை காலம் தபால் துறை அறிவிப்பு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 31, 2015

செல்வமகள் சேமிப்பு கணக்கு தொடங்க சலுகை காலம் தபால் துறை அறிவிப்பு

தபால் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–பெண் குழந்தைகளை ஊக்குவிப்பதற்காக மத்திய அரசு ‘‘சுகன்யா சம்ரித்தி’’ என்ற செல்வமகள் சேமிப்பு கணக்கு திட்டத்தை அறிமுகப்படுத்தியது. நாடு முழுவதும் தொடங்கப்பட்ட 73 லட்சம் கணக்குகளில் 11 லட்சம் கணக்குகள் தமிழகத்தில் தொடங்கப்பட்டு உள்ளன.


இந்ததிட்டத்தில் இதுவரை ரூ.2 ஆயிரத்து 328 கோடி முதலீடு பெறப்பட்டுள்ளது.10 வயதுக்கு உட்பட்ட பெண் குழந்தைகளுக்காக மட்டும் தொடங்கப்பட்டாலும், தற்போது 2 ஆண்டுகள் சலுகை வழங்கப்பட்டு உள்ளது. அதன்படி 2003 டிசம்பர் 3–ந் தேதி முதல் 2005–ம் ஆண்டு டிசம்பர் 2–ந் தேதி வரை பிறந்த பெண் குழந்தைகள் இத்திட்டத்தில் வரும் டிசம்பர் 1–ந் தேதி வரை சேரலாம். இந்த தேதிக்கு பிறகு 10 வயது வரையுள்ள பெண் குழந்தைகள் மட்டுமே சேர முடியும். அனைத்து அஞ்சல் அலுவலகங்களிலும் ஆயிரம் ரூபாய் செலுத்தி கணக்கு தொடங்கலாம். அதன்பிறகு ரூ.100 அல்லது அதன் மடங்காக செலுத்தலாம். இதற்கு 9.2 சதவீதம் வட்டி அளிக்கப்படுகிறது.இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி