அனைத்து வங்கிகளும் நாளை வழக்கம் போல் இயங்கும் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 22, 2015

அனைத்து வங்கிகளும் நாளை வழக்கம் போல் இயங்கும்

மொஹரம் பண்டிகைக்கான விடுமுறை சனிக்கிழமைக்கு மாற்றப்பட்டதால் அனைத்து வங்கிகளும் நாளை வழக்கம் போல் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்நாட்டில் ஆயுத பூஜை, விஜயதசமி மற்றும் மொஹரம் பண்டிகைகளுக்காக தொடர்ந்து 5 நாட்களுக்கு வங்கிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது.


அரசு தலைமை காஜியின் அறிவிப்பைத் தொடர்ந்து மொஹரம் விடுமுறை, வெள்ளிக்கிழமையில் இருந்து சனிக்கிழமைக்கு மாற்றி தமிழக அரசு ஆணை பிறப்பித்தது. இதைத் தொடர்ந்து அனைத்து அரசு அலுவலகங்களும் நாளை வழக்கம்போல செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல், வங்கிகள் அனைத்தும் நாளை இயங்கும் என உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.வரும் சனிக்கிழமை, நான்காவது சனிக்கிழமை என்பதால் அன்றைய தினம் வங்கிகள் அனைத்திற்கும் விடுமுறை நாள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி