போராட்டத்தில் ஈடுபடும் ஆசிரியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை: கல்வித்துறை எச்சரிக்கை. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 8, 2015

போராட்டத்தில் ஈடுபடும் ஆசிரியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை: கல்வித்துறை எச்சரிக்கை.

தமிழகம் முழுவதும் 'ஜாக்டோ' ஆசிரியர் கூட்டு இயக்கம் சார்பில் இன்று வேலை நிறுத்தம் நடக்கிறது.சமரச பேச்சு வார்த்தை நடத்தியும் அதில் உடன்பாடு ஏற்படாததால் போராட்டத்தில் குதித்துள்ளனர். போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்கள் எத்தனை பேர் என்று மாவட்டம் வாரியாக கல்வித்துறை பட்டியல் கேட்டுள்ளது. வேலை நிறுத்தத்தில் தொடக்கபள்ளி ஆசிரியர்கள் அதிகளவு பங்கேற்று இருப்பதால் தொடக்க கல்வி இயக்குனர் இளங்கோவன் ஒவ்வொரு மாவட்ட தொடக்ககல்வி அதிகாரிகளும் பள்ளிக்கு வராத ஆசிரியர்கள்பெயர் விவரங்களை உடனடியாக அனுப்பும்படி அறிவுறுத்தியுள்ளார்.


மேலும் ஸ்டிரைக்கில் ஈடுபட்ட ஆசிரியர்களுக்கு இன்று ஒருநாள் சம்பளம் ரத்து செய்யப்படுகிறது.'நோ ஒர்க் நோ பே' என்ற அடிப்படையில் இன்று பணிக்கு வராத ஆசிரியர்களுக்கு 'கட்' செய்யப்படும். இது தவிர துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படுமா? என்பது குறித்து கல்வித்துறை அதிகாரிகளிடம் கேட்டதற்கு, போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தனர்.


இது குறித்து கல்வி அதிகாரிகள் மேலும் கூறியதாவது:-


அரசு பள்ளிகளில் எத்தனை ஆசிரியர்கள் வேலைக்கு வந்தார்கள், எத்தனை பேர் வரவில்லை,ஏற்கனவே விடுப்பில் உள்ளவர்கள் எத்தனை பேர் என்ற விவரங்கள் கேட்கப்பட்டுள்ளன.அந்த பட்டியல் வந்த பிறகு அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும். ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டால் ஆசிரியர்களின் பதவி உயர்வு பாதிக்கும். பதவிஉயர்வுக்கான பேனலில் இடம் பெற முடியாது.


இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

10 comments:

  1. சம்பளம் தானே போகும்!! உயிர் போகாதே!!!

    ReplyDelete
  2. Director sampalam kurainja porattam panna maattara ???

    ReplyDelete
  3. Idhu pondra nilaiyil than kalvithurai tamilagathil seyalpadugiradhu.....

    Baley baley

    ReplyDelete
  4. 2006 வேலையில் சேர்ந்தவர்களுக்கும் அதன் பிறகு வேலையில்சேர்ந்த எங்களுக்கும் சம்பளவேறுபாடு உள்ளது அதை சரி செய்யவே இந்த போராட்டம்




    ReplyDelete
  5. Edhu pondra mirattalkalukkellaam naangal anja maatom

    ReplyDelete
  6. IAS,IPS officers maathiri naangal laks LA sambalamum,kimbalamum peruvathillai....avargal pola sambalamum ketkavillai....yerkanave petru vandha oodhiyaththai thaan thirumba valangumbadi ketkindrom.edhu thavaraa?Tharmam orunaal nichayam vellum

    ReplyDelete
  7. இதற்கு எல்லாம் அஞ்சாது ஜாக்டோ .

    ReplyDelete
  8. ஒன்றுபடுவோம் மீண்டும் சளைக்காமல் போராடுவோம்....

    ReplyDelete
  9. ஒன்றுபடுவோம் மீண்டும் சளைக்காமல் போராடுவோம்....

    ReplyDelete
  10. Athikarikaluku ipathan veeram varutho unga puchandiku jactto anchathu

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி