ஆர்.கே.நகர் கலைக் கல்லூரி இன்று திறப்பு? - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 28, 2015

ஆர்.கே.நகர் கலைக் கல்லூரி இன்று திறப்பு?

முதல்வர் ஜெயலலிதாவின் சொந்த தொகுதியான ஆர்.கே. நகரில் அரசு கலைக் கல்லூரிஇன்று திறக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.சென்னை ஆர்.கே.நகரில் புதிய அரசு கலைக் கல்லூரி திறக்கப்படும் என்று முதல்வர் சட்டப்பேரவையில் அறிவித்திருந்தார். தண்டையார் பேட்டை கும்மாளம்மன் தெருவில் உள்ள மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில் தற்காலிகமாக இந்த கல்லூரி தொடங்கப்படும் என்று கடந்த வாரம் அறிவிக்கப்பட்டது.


இங்கு தற்போது முதலாண்டு பி.ஏ., பி.காம். படிப்புகள் தொடங் கப்படவுள்ளன. நடப்பு கல்வி ஆண்டிலேயே இக்கல்லூரி தொடங்கப்படுவதால் அரசு கல்லூரிகளில் சேர விண்ணப்பித்து இடம் கிடைக்காத மாணவர்களுக்கு இப்புதிய கல்லூரியில் இடம் வழங்க அரசு முடிவுசெய்துள்ளது.புதிய கல்லூரிக்கு ரூ.8.28 கோடி ஒதுக்கியிருப்பதாக அரசு அறிவித்துள்ளது. அதைத் தொடர்ந்து தண்டையார்பேட்டை கும்மாளம்மன் கோயில் தெருவில் உள்ள மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில் புதிய கல்லூரிக்கான கட்டுமான பணிகள் பள்ளி விடுமுறை நாட்களில் நடைபெற்று முடிவடைந்துள்ளன. இந்நிலையில் இக்கல்லூரியை இன்று மாலை காணொலி காட்சி மூலம் முதல்வர் திறந்து வைப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.தரை தளத்தில் உள்ள 5 அறைகளில் இயங்கி வரும் மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில் தற்போது 96 மாணவர்கள் படித்து வருகின்றனர். முதல் தளத்தில் உள்ள 5 அறைகளில் கல்லூரி வகுப்புகள் நடத்தப்படவுள்ளன.


அந்த வகுப்பறைகளை புதுப்பிக் கும் பணி முடிந்துள்ளது.மேலும் கல்லூரி முதல் வருக்கான தனி அறை தரை தளத்திலும் மாணவர்களுக்கான கேன்டீன் முதல் தளத்திலும் கட்டப் பட்டுள்ளது. மாணவர் சேர்க்கைக் காக வருபவர்கள் தரை தளத்தில் உள்ள முதல்வர் அறையை அணு கலாம். 5 வகுப்பறைகள் மட்டுமே இருப்பதால், இந்த கல்வியாண் டில் பி.ஏ. தமிழ் இலக்கியம், ஆங்கில இலக்கியம், பொருளா தாரம், பி.காம். ஆகிய படிப்புகள் மட்டும் தொடங்கப்படவுள்ளன.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி