உதவி பேராசிரியர் ஆக எழுதுங்கள் ’நெட்’! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 10, 2015

உதவி பேராசிரியர் ஆக எழுதுங்கள் ’நெட்’!

உதவி பேராசிரியர் பணி மட்டுமின்றி, ஆராய்ச்சி படிப்பிற்கான ஊக்கத்தொகை (ஜே.ஆர்.எப்.,) பெறவும் இத்தேர்வில் தகுதி பெற வேண்டும். பல்கலைக்கழக மானியக்குழு (யு.ஜி.சி.,) சார்பாக, இடைநிலை கல்வி வாரியத்தால் (சி.பி.எஸ்.இ.,) நடத்தப்படும் இத்தேர்வை லட்சணக்கானோர் எழுதுவதில் இருந்தேஇத்தேர்வின் முக்கியத்தை உணர்ந்துகொள்ளலாம்.


யார் எழுதலாம்?

தமிழ், ஆங்கிலம், பொருளாதாரம், வணிகவியல், வரலாறு, அரசியல் அறிவியல், மேலாண்மை என மொத்தம் 99 பாடங்களில் முதுநிலைப் பட்டம் பெற்றவர்கள் ‘நெட்’ தேர்வு எழுதலாம். மேலும், முதுநிலை பட்டப்படிப்பில் குறைந்தபட்சம் 55 சதவீத மதிப்பெண் பெற்றிருப்பது அவசியம்.எஸ்.சி., எஸ்.டி., ஓ.பி.சி., பிரிவினர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் 50 சதவீத மதிப்பெண் பெற்றிருந்தால் போதுமானது. முதுநிலை இறுதி ஆண்டு படித்துக் கொண்டிருக்கும் மாணவர்களும் விண்ணப்பிக்கலாம். பிஎச்.டி., படித்தவர்கள் இத்தேர்வை எழுத வேண்டிய அவசியம் இல்லை.

வயது வரம்பு: உதவி பேராசிரியர் பணியுடன், ஜே.ஆர்.எப்., ஊக்கத்தொகை பெற விண்ணப்பிப்போர், அதிகபட்சம் 28 வயதிற்குள் இருக்க வேண்டும். எஸ்.சி., எஸ்.டி., ஓ.பி.சி., மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கு 5 ஆண்டுகள் தளர்வு உண்டு. உதவி பேராசிரியர் பணிக்காக மட்டும் விண்ணப்பிப்போருக்கு வயது வரம்பு இல்லை.தேர்வு விபரம்ஜூன் மற்றும் டிசம்பர் என ஆண்டுக்கு இரண்டு முறை நடத்தப்படும். இத்தேர்வு முற்றிலும் ‘அப்ஜெக்டிவ்’ முறையைக் கொண்டது; மொத்தம் மூன்று தாள்கள். அனைத்து கேள்விகளுக்கும் தலா 2 மதிப்பெண்கள். ‘நெகட்டிவ்’ மதிப்பெண்கள் இல்லை.

தாள் 1: ஆசிரியர் பணி மற்றும் ஆராய்ச்சி மீதான ஆர்வத்தை சோதிக்கும் வகையில் 60 வினாக்கள் கேட்கப்படும். இதில் 50 வினாக்களுக்கு பதில் அளித்தால் போதும்.

தாள் 2: விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யும் பாடத்தில் இருந்து கேட்கப்படும் 50 வினாக்களுக்கும் பதில் அளிக்க வேண்டும்.

தாள் 3: விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யும் பாடத்தில் இருந்து கேட்கப்படும் 75 வினாக்களுக்கும் பதில் அளிக்க வேண்டும்.தேர்வு எழுத, முதல் இரு தாள்களுக்கும் தலா 1.25 மணி நேரம், மூன்றாவது தாளுக்கு மட்டும் 2.50 மணி நேரம் கால அவகாசம் உண்டு. தேர்ச்சி0 பெற ஒவ்வொரு தாளிலும் குறிப்பிட்ட அளவு மதிப்பெண் எடுக்க வேண்டியது அவசியம்.விண்ணப்பிக்க கடைசி நாள்: நவம்பர் 1தேர்வு நாள்: டிசம்பர் 27ம் தேதிமேலும் தகவல்களுக்கு: cbsenet.nic.in

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி