ஆசிரியர்களின் ஒரு நாள் ஸ்டிரைக் வெற்றி... இது ஜாக்டோ: பாதிப்பில்லை என்கிறது அரசு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 9, 2015

ஆசிரியர்களின் ஒரு நாள் ஸ்டிரைக் வெற்றி... இது ஜாக்டோ: பாதிப்பில்லை என்கிறது அரசு

வேலை நிறுத்தப்போராட்டம் வெற்றி பெற்றதாக ஆசிரியர்கள் கூட்டமைப்பான ஜாக்டோ அமைப்பு அறிவித்துள்ளது. அதே நேரத்தில் ஆசிரியர்கள் வேலைநிறுத்தத்தால் பாதிப்பில்லை, சிறப்பு ஆசிரியர்களைக் கொண்டு தொடக்கப் பள்ளிகள் இயங்கியதாக கல்வித்துறை இயக்குநர் தெரிவித்துள்ளார்.


மத்திய அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும் என்பது உள்பட 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி 27ஆசிரியர் சங்கங்களை சேர்ந்த ஆசிரியர்கள் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர். இன்று பணிக்கு செல்லாமல் அனைத்து மாவட்ட கல்வி அதிகாரி அலுவலகம் முன்பும் ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 3 லட்சம் ஆசியர்கள் இன்று நடைபெற்ற போராட்டத்தில் பங்கேற்றனர். வேலைநிறுத்தம் அறிவிப்பு ஜாக்டோ அமைப்பினர் தங்களது கோரிக்கைகள் தொடர்பாக வேலை நிறுத்த போராட்டம் அறிவித்ததும் பள்ளிக்கல்வித்துறை செயலாளர் சபீதா அழைத்து பேச்சு வார்த்தை நடத்துவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் பள்ளிக்கல்வி இயக்குநர் எஸ்.கண்ணப்பன், தொடக்கக் கல்வி இயக்குநர் ஆர்.இளங்கோவன் ஆகியோர் ஜாக்டோ உயர்நிலைக்குழு உறுப்பினர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்படாததால் திட்டமிட்டபடி வேலைநிறுத்தப் போராட்டம் இன்று நடைபெறும் என அறிவித்தனர். அதிரடி ஆலோசனை போராட்டத்தை முறியடிக்க பள்ளிக் கல்வித் துறை முதன்மைச் செயலாளர் டி.சபீதா, பள்ளிக்கல்வி இயக்குநர் கண்ணப்பன், தொடக்கக் கல்வி இயக்குநர் இளங்கோவன் ஆகியோர் தலைமைச் செயலகத்தில் நேற்று ஆலோசனை நடத்தினர். ஆசிரியர்கள் போராட்டம் குறித்தும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும் ஆலோசனை நடத்தப்பட்டது. இதையடுத்து, மாவட்ட அளவில் பள்ளிகளின் செயல்பாடுகளைக் கண்காணிக்க 21 இணைஇயக்குநர்கள் நியமிக்கப்பட்டு, அவர்களுக்கு மாவட்டங்கள் ஒதுக் கீடு செய்யப்பட்டுள்ளன. மேலும் அனைத்து பள்ளிகளுக்கும் பலத்த போலீஸ் பாதுகாப்புபோடவும் உத்தரவிடப்பட்டது.


ஆசிரியர்கள் போராட்டம் காலை 9 மணிக்குள் ஆசிரியர்கள் வருகைப் பதிவேட்டில் கையெழுத்து இடவேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு இருந்ததால் குறிப்பிட்ட நேரத்திற்கு முன்னதாக சில ஆசிரியர்கள் வந்தனர். உயர் நிலை மற்றும் மேல் நிலைப் பள்ளிகளை பொறுத்த வரை 80 சதவீத ஆசிரியர்கள் பணிக்கு வந்தனர். ஆனால் தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் பணிக்கு வரவில்லை. புறக்கணித்த சபீதா ஆசிரியர் சங்கங்களின் அமைப்பான ஜாக்டோ நிர்வாகிகளை அழைத்து பள்ளிக்கல்வித்துறை செயலாளர் சபீதாபேச்சுவார்த்தை நடத்தியிருந்தால் பிரச்னை இந்த அளவுக்கு வளர்ந்திருக்காது. ஆனால் பள்ளிக்கல்வி செயலாளர் சபீதா தங்களை புறக்கணித்ததை தாங்கிக்கொள்ள ஜாக்டோ நிர்வாகிகள் வேறு வழியின்றி வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். மாணவர்கள் வீடு திரும்பல் தமிழகம் முழுவதும் 80 சதவிகித ஆசிரியர்கள் பணிக்கு செல்லவில்லை . அரசு தொடக்கப் பள்ளி கள், நடுநிலைப் பள்ளி கள், உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகள் திறக்கப்பட்டிருந்த நிலையிலும் 11 மணிக்கு மாணவர்கள் வீடு திருப்பினர்.


சில ஊர்களில் மதிய உணவிற்குப் பின்னர் மாணவர்கள் வீடு திரும்பியதாக தகவல்கள் வெளியாகின. விளையாடிய மாணவர்கள் நிலக்கோட்டை யூனியனில் மொத்தமுள்ள 130 பள்ளிகளில் 28 பள்ளிகளுக்கு ஆசிரியர்கள் வரவில்லை. யூனியனில் உள்ள அம்மையநாயக்கனூர், சேவுகம்பட்டி, மட்டப்பாறை, நிலக்கோட்டை உள்ளிட்ட 6 மேல்நிலைப்பள்ளிகளிலும் ஆசிரியர்கள் இன்று பணிக்கு வரவில்லை. இதனால் மாணவ- மாணவிகள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். ஆசிரியர்கள் போராட்டத்தினால் மாணவர்கள் வகுப்பறையை விட்டு மைதானத்தில் விளையாடிக்கொண்டு இருந்தனர். அரசு ஆரம்ப பள்ளி மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் ஆசிரியர்கள் இல்லாததால் மாணவர்கள் வகுப்பறையில் விளையாடினர். தேனியில் பாதிப்பில்லை தேனி மாவட்டத்தில் எந்தவித பாதிப்பும்இல்லை. மாவட்டத்தில் உள்ள 767 அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் இன்று வழக்கம் போல் செயல்பட்டது. பகுதி நேர ஆசிரியர்கள், வட்டார வள மைய ஆசிரியர் பயிற்றுனர்கள், உடற்கல்வி ஆசிரியர்கள், பணிக்கு வந்திருந்தனர். மாணவர்களுக்கு ஜாலி புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளிகளில் ஆசிரியர்கள் பணிக்கு வந்ததால் பள்ளி வழக்கம் போல இயங்கியது. ஆனால் கீரமங்கலம் பகுதியில் உள்ள தொடக்கப்பள்ளிகள், நடுநிலைப் பள்ளிகளில் ஆசிரியர்கள் பணிக்கு வராததால் திறக்கப்படவில்லை. அதனால் மாணவர்கள் பள்ளிக்கு வந்து திரும்பிச் சென்றனர்.


பள்ளிகள் மூடல்


செரியலூர்ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் ஒரு ஆசிரியர் மட்டுமே வந்திருந்தார். அதே போல நகரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ஆசிரியர்கள் வராததால் பள்ளி திறக்கப்படவில்லை. அதனால் பள்ளிக்கு வந்த மாணவ, மாணவிகள் பலர் வீட்டுக்கு திரும்பிச் சென்றனர். பல மாணவர்கள் மதிய உணவு வரை இருந்து மதிணஉணவு சாப்பிட்ட பிறகு வீட்டுக்குச் சென்றனர்.


நெல்லையில் போராட்டம் நெல்லையில் உள்ள மாவட்ட தொடக்க கல்வி அலுவலகம் முன்பாக ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்டம் முழுவதும் 2000 ஆசிரியர்களில்90 சதவீதம் பேர் பள்ளிக்கு வரவில்லை. இருப்பினும் பள்ளிகள் மூடப்படாமல்,சத்துணவு ஆசிரியர், உடற்பயிற்சி ஆசிரியர் என போராட்டத்தில் பங்கேற்காத ஒன்றிரண்டு ஆசிரியர்களை கொண்டு இயக்கப்பட்டன. கல்வித்துறை அறிவிப்பு ஆசிரியர்கள் வேலைநிறுத்தத்தால் உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி செயல்பாட்டில் பாதிப்பில்லை, தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் அதிக அளவில் வரவில்லை, சிறப்பு ஆசிரியர்களைக் கொண்டு தொடக்கப் பள்ளிகள் இயங்கி வருகின்றன, என கல்வித்துறை இயக்குநர் தெரிவித்துள்ளார்.

12 comments:

  1. This is unnecessary & selfish strike. Many of the Graduates & Engineers have unemployment problem. Maximum Sch Grade teacher have't sufficient Knowledge. Just they stied +2, and D.T.Ed. Their salary above 30000. But they asked more salary. If Govt Take strong action and remove from job. Next month they earn only 3000( They are worth is 3000 Only) . This is only fact. Teacher's well know it.
    If Govt conduct TET for working teacher. Only 20% only pass the exam.

    ReplyDelete
    Replies
    1. டேய் புறம்போக்கு ஆசிரியர்களின் 15 அம்ச கோரிக்கையை நல்லா படிச்சிப்பாருடா. சம்பளம் போதலையினு எங்கடா கேட்கிறாங்க?. உனக்கு திறமையிருந்தா அரசு ஆசிரியர் வேலைக்கு போடா சொறி பிடிச்ச நாயே.

      Delete
    2. டேய் புறம்போக்கு ஆசிரியர்களின் 15 அம்ச கோரிக்கையை நல்லா படிச்சிப்பாருடா. சம்பளம் போதலையினு எங்கடா கேட்கிறாங்க?. உனக்கு திறமையிருந்தா அரசு ஆசிரியர் வேலைக்கு போடா சொறி பிடிச்ச நாயே.

      Delete
    3. டேய் புறம்போக்கு ஆசிரியர்களின் 15 அம்ச கோரிக்கையை நல்லா படிச்சிப்பாருடா. சம்பளம் போதலையினு எங்கடா கேட்கிறாங்க?. உனக்கு திறமையிருந்தா அரசு ஆசிரியர் வேலைக்கு போடா சொறி பிடிச்ச நாயே.

      Delete
  2. மூடனே, எங்கள் உரிமையை நாங்கள் கேட்கிறோம், எங்களின் போராட்டத்தை குறைகூறும் நீ BRC ல் உட்கார்ந்து ஊரை ஏமாற்றுகிறாய்.

    ReplyDelete
    Replies
    1. Ungalukku evolo kuduthalum patthathu....,..........!

      Delete
    2. Ungalukku evolo kuduthalum patthathu....,..........!

      Delete
    3. நீ என்ன உங்கப்பன் வீட்டிலிரிந்தா கொடுக்கபோகிற.ஏண்டா எங்க பாவத்தில் வந்து விழற

      Delete
  3. Moodi kittu poda dai.oru velaium seiyyama lacha kanakkula sampalam vankura MP MLA va poi kelu intha kelvi..nanga matha ella states laium kodukkuratha than nangalum kekkurom..

    ReplyDelete
  4. Moodi kittu poda dai.oru velaium seiyyama lacha kanakkula sampalam vankura MP MLA va poi kelu intha kelvi..nanga matha ella states laium kodukkuratha than nangalum kekkurom..

    ReplyDelete
  5. Dai kodi kanakkula oozal panravana ketka maatringa Naanga uzaippukku oodhiyam ketkirom da loosu payala

    ReplyDelete
  6. ஹலோ சார் நாங்க உழைக்கவில்லையா வந்து பாருங்கள் .நாம் படிக்கும்போது ஒரு பாடத்தை ஒரு முறை நடத்தி விளக்கம் சொன்னார்கள். இன்று ஒரு பாடத்தை ஒரு குழந்தைக்கு ஒர் முறை வீதம் 30 பேருக்கு 30 முறை கற்பிக்கின்றோம்.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி