கணிதத்திறன் போட்டி டிச., 20க்கு மாற்றம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 28, 2015

கணிதத்திறன் போட்டி டிச., 20க்கு மாற்றம்

தமிழக அறிவியல் தொழில் நுட்ப மையம் சார்பில், ஆண்டுதோறும் பள்ளி மாணவர்களுக்கு, கணிதத்திறன் தேர்வு நடத்தப்படும். 5ம் வகுப்பு முதல், 8ம் வகுப்பு மாணவர்கள் வரை பங்கேற்பர். இந்த ஆண்டுக்கான தேர்வு, நவ., 22ல் நடக்கும் என அறிவிக்கப்பட்டது; கன மழையின் காரணமாக,நவ., 29ம் தேதிக்கு மாற்றப்பட்டது. இன்னும் பல இடங்களில் வெள்ளம் வடியாமல் உள்ளதால், இத்தேர்வு, டிச., 20ம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது.


இதற்கான அறிவிப்பை, தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மைய செயல் இயக்குனர் அய்யம் பெருமாள் அறிவித்துள்ளார். தேதி மாற்றப்பட்டுள்ளதால், விருப்பமுள்ள மாணவர்கள், டிச., 17 வரை, தங்கள் பெயரை பதிவு செய்யலாம் எனவும், அவகாசம் அளிக்கப்பட்டுஉள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி