இனிமேல் செல்போன் டேட்டாவை காலி செய்ய காலக்கெடு கிடையாது; ஏர்டெல் அதிரடி - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 26, 2015

இனிமேல் செல்போன் டேட்டாவை காலி செய்ய காலக்கெடு கிடையாது; ஏர்டெல் அதிரடி

நம் நாட்டில் அதிக வாடிக்கையாளர்களை கொண்டுள்ள பாரதி ஏர்டெல் நிறுவனம் ஒரு புதிய திட்டத்தை வெளியிட்டுள்ளது. பிரிபெய்டு வாடிக்கையாளர்கள் தங்களது இணையதள சேவைக்காக செய்துகொள்ளும் ரீசார்ஜ்ஜுகளுக்கு வேலிடிட்டி எல்லை கிடையாது என்று தெரிவித்துள்ளது.உதாரணத்திற்கு, 1 ஜிபி டேட்டா பயன்படுத்த வாடிக்கையாளர் ஒருவர் ரீசார்ஜ் செய்தால் ஒரு மாதத்திற்குள் இணையதள டேட்டாவை காலி செய்தாக வேண்டிய கட்டாயம்முன்பு இருந்தது.


ஆனால், இனிமேல் டேட்டாவை காலி செய்ய காலக்கெடு கிடையாது. உபயோகம் செய்து டேட்டா காலியான பிறகு ரீசார்ஜ் செய்தால் போதும்.தற்போது இந்த திட்டம் 5 வகை பிளான்களுடன் டெல்லி மற்றும் மும்பையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. விரைவில் தமிழகத்திலும் அறிமுகப்படுத்தப்படும்என்று எதிர்பார்க்கப்படுகிறது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி