பிளஸ் 2 பொதுத்தேர்வில், முதற்கட்டமாக, செய்முறை தேர்வு, நாளை துவங்குகிறது. தேர்வின் போது, ஆய்வகங்களில் அதிரடி சோதனை நடத்த உத்தரவிடப்பட்டு உள்ளது. தமிழகம் முழுவதும், மாநில அரசின் பாடத்திட்டத்தின் கீழ் பயிலும், பிளஸ் 2 மாணவர்களுக்கு, மார்ச் 4ம் தேதி, பொதுத்தேர்வு துவங்கி, ஏப்., 1ம் தேதி முடிகிறது; 8.80 லட்சம் பேர் தேர்வு எழுத உள்ளனர். முதற்கட்டமாக, நாளை செய்முறை தேர்வு துவங்குகிறது.
தமிழகம் முழுவதும், இரண்டு பிரிவுகளாக இந்த தேர்வுகள் நடத்தப்படுகின்றன. சில பள்ளிகளுக்கு, நாளை முதல், பிப்., 15ம் தேதி வரையிலும்; சில பள்ளிகளுக்கு, பிப்., 16ம் தேதி முதல், 25ம் தேதி வரையிலும் நடக்கஉள்ளன.செய்முறை தேர்வில், மாணவர்களின் செயல்முறை பதிவேடு நோட்டு புத்தகம் அடிப்படையிலும், ஆய்வகத்தில் நேரடி செய்முறை பயிற்சியின் அடிப்படையிலும், மதிப்பெண் வழங்கப்படும். ஆய்வகங்களுக்கு, வேறு பள்ளிகளில் இருந்து ஆசிரியர்கள், கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டு உள்ளனர். தேர்வின் போது, ஆய்வகங்களில் முறைகேட்டை தடுக்க, பறக்கும்படையினர் ஆய்வு நடத்த உத்தர விடப்பட்டு உள்ளது. குறிப்பாக, தனியார் பள்ளி களை அதிகளவில் கண்காணிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
Feb 7, 2016
Recommanded News
Related Post:
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி