மகாமகம்: 3 மாவட்டங்களுக்கு விடுமுறை - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 6, 2016

மகாமகம்: 3 மாவட்டங்களுக்கு விடுமுறை

மகாமக பெருவிழாவையொட்டி, பிப்., 22ல், மூன்று மாவட்டங்களுக்கு, அரசு பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.மாசி மாதம், குரு, சிம்ம ராசியில் இருக்கும் போது, மகம் நட்சத்திரமும், பூராட நட்சத்திரமும், பொருந்தி வரும் காலம், மகாமகம் ஆகும். இந்நிகழ்வு, 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை வருகிறது.


அன்று, நதிகளில் புனித நீராடல் நடத்துவது சிறப்பு.கும்பகோணத்தில் மட்டும், புனித நீராடல் என்பது, மகாமக குளத்தில் நீராடுவதை குறிக்கும்.இந்த ஆண்டு மகாமகப் பெருவிழா, பிப்., 22ல் நடைபெறுகிறது.

அன்றைய தினம், தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர் மாவட்டங்களுக்கு, அரசு பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அன்றைய தினம், மூன்று மாவட்டங்களில் உள்ள, வங்கிகள், தனியார் தொழிற்சாலைகள்,கல்வி நிறுவனங்கள் அனைத்தும் மூடப்படும் என அரசு அறிவித்துள்ளது.இதற்கான அரசாணை, நேற்று பிறப்பிக்கப்பட்டது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி