ப்ளஸ் 1, ப்ளஸ் 2 வகுப்புகளுக்காக, பாடத்துக்கு ஒன்று வீதம் ஒன்பது முதுகலை ஆசிரியர் பணியிடங்கள் என, மொத்தம், 900 முதுகலை ஆசிரியர் பணியிடங்கள் ஒதுக்கப்பட்டன. இப்பணியிடங்களுக்கு, ஓராண்டுக்கு சம்பளம் வழங்குவதற்கான ஆணை, 2014 செப்., 22ம் தேதியன்று வெளியிடப்பட்டது. இவை, 2015 செப்., 22ம் தேதியுடன் நிறைவடைந்த நிலையில், கடந்த மூன்று மாதங்களாக, இந்த ஆசிரியர்கள் சம்பளம் பெற முடியாத நிலை இருந்தது. மேலும் தொடர்ச்சியாக ஐந்தாண்டுகளுக்கான தொடர் நீட்டிப்பு செய்து, அரசாணை வழங்க வேண்டும் என தமிழக அரசை, பள்ளிக்கல்வித்துறை கேட்டிருந்தது.
இதில் தாமதம் ஏற்பட்டு வரும் நிலையில், ஆசிரியர்கள் சம்பளம் பெற வேண்டும் என்பதற்காக, மேலும் ஓராண்டுக்கு நீட்டிப்பு வழங்கி, பள்ளிக்கல்வித்துறை செயலாளர் உத்தரவிட்டுள்ளார். இதன் மூலம், நிலுவை மற்றும் ஜனவரி மாத சம்பளத்தை இன்னும் சில நாட்களில் பெற்றுக்கொள்ள முடியும்.
when pg trb exam
ReplyDelete