அலுவலர்கள் அரசாணை ஏதும் வராது முன்பே ஒரு நாள் ஊதியம் பிடித்தம் - ஆசிரியர்கள் தவிப்பு! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 12, 2016

அலுவலர்கள் அரசாணை ஏதும் வராது முன்பே ஒரு நாள் ஊதியம் பிடித்தம் - ஆசிரியர்கள் தவிப்பு!

வருமானவரி கல்வித்துறையில் எப்போதுமே மார்ச் முதல் அடுத்தாண்டு பிப்ரவரி வரை மட்டுமே கணக்கிடப்படும்.ஆனால் காஞ்சிபுரம் மாவட்ட பகுதியிலுள்ள உதவித்தொடக்க கல்வி அலுவலர்கள் சிலர் தற்பொழுது 3 நாட்கள் (30, 31, 1) நடந்த தொடர் மறியலில் திங்கள் ( 1.2.16) கிழமை கலந்து கொண்டவர்களின் ஒரு நாள் சம்பளம்  பிடித்தம்  செய்து தான் காட்ட வேண்டும் என ஆசிரியர்கள் மத்தியில் குழப்பம் ஏற்படுத்தி  வருவதாகஆசிரியர்கள்  புலம்புகின்றனர்.


அரசு இதுவரை தொடர் மறியல் கலந்தவர்களது சம்பளம்  பிடித்தம் பற்றிய ஆணை பிறப்பிக்காத போது தன்னிச்சையாக இவர்கள்  பிடித்தம் செய்வது  என்ற தவறான அணுகுமுறை  ஆசிரியர்கள்  மத்தியில்  தெரிவித்துள்ளனர்.உ.தொ.கல்வி அதிகாரிகளும் அரசாணைகளை முழுமையாக தெரிந்து கொள்ளாத நிலையில் மற்ற மாவட்டம், ஒன்றியம் என அருகில் உள்ளவர்களிடமாவது கேட்டறிய வேண்டும் என ஆசிரியர்கள்  எதிர்பார்க்கின்றனர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி