தேர்வு பணியை கவனிக்க முடியாமல் பள்ளி தலைமைஆசிரியர்கள் தவிப்பு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 6, 2016

தேர்வு பணியை கவனிக்க முடியாமல் பள்ளி தலைமைஆசிரியர்கள் தவிப்பு

அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆசிரியரல்லாத பணியிடங்கள் காலியாக இருப்பதால், தேர்வு பணியை கவனிக்க முடியாமல் தலைமை ஆசிரியர்கள் தவிக்கின்றனர். அரசு உதவிபெறும் உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில்இளநிலை உதவியாளர், இரவு காவலர், அலுவலக உதவியாளர் போன்ற ஆசிரியரல்லாத பணியிடங்கள் உள்ளன.


இளநிலை உதவியாளர்கள், ஆசிரியர்கள் பணப்பலன், இலவச சைக்கிள், லேப்டாப் போன்ற நலத்திட்ட உதவி கணக்குகளை பராமரித்தல், தேர்வு ஆயத்தம் போன்ற பணிகளை மேற்கொள்கின்றனர். காவலர்கள் இரவில் பள்ளி பொருட்களை பாதுகாக்கின்றனர்.பல ஆண்டுகளாக உதவிபெறும் பள்ளிகளில் காலியாகும் பணியிடங்களை நிரப்ப கல்வித்துறை அனுமதிப்பதில்லை. இதனால் மாநிலம் முழுவதும் உதவிபெறும் பள்ளிகளில் 2,434 ஆசிரியரல்லாத பணியிடங்கள் காலியாக உள்ளன.இதனால் அனைத்து பணிகளையும் தலைமைஆசிரியர்களே கவனிக்கின்றனர்.

சில பள்ளிகளில் இரவு காவலர்கள் இல்லாததால் இலவச பொருட்கள் மாயமாகி வருகின்றன. விரைவில் பிளஸ் 2, பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு துவங்க உள்ளது. பணியாளர்கள் இல்லாததால் தேர்வு ஆயத்த  பணிகளை மேற்கொள்ள முடியாமல் தலைமைஆசிரியர்கள் தவிக்கின்றனர்.

பள்ளி நிர்வாகிகள் கூறுகையில், “ஆசிரியரல்லாத பணியாளர்களின் பணிகளையும் தலைமைஆசிரியர்கள் கூடுதலாக கவனிப்பதால் கல்வி பணி பாதிக்கப்பட்டுள்ளது. காலியிடங்களை நிரப்ப பலமுறை கல்வித்துறையிடம் வலியுறுத்தியும் நடவடிக்கை இல்லை,” என்றனர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி