சான்றிதழ்களை அரசிடம் ஒப்படைக்கும் போராட்டம் -தமிழ்நாடு பி.எட்., கணினி அறிவியல்வேலையில்லா பட்டதாரி ஆசிரியர் சங்கம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 13, 2016

சான்றிதழ்களை அரசிடம் ஒப்படைக்கும் போராட்டம் -தமிழ்நாடு பி.எட்., கணினி அறிவியல்வேலையில்லா பட்டதாரி ஆசிரியர் சங்கம்

சமச்சீர் கல்வி பாடத்திட்டத்தில், 9ம் வகுப்பு வரை அறிமுகம் செய்யப்பட்ட, 'கம்ப்யூட்டர் சயின்ஸ்' என்ற கணினி அறிவியல் பாடம், ஐந்து ஆண்டுகளாக மாயமாகி விட்டது. அதனால், அச்சடிக்கப்பட்ட கணினி அறிவியல் புத்தகங்கள், பாடநுால் கழக கிடங்கில் மக்கி போகும் நிலையில் உள்ளன.தமிழகத்தில், 2011ல், சமச்சீர் கல்வி பாடத்திட்டம், 1ம் வகுப்பு முதல், 9ம் வகுப்பு வரை அறிமுகமானது.


அப்போது, தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல், சமூக அறிவியல், சுற்றுச்சூழல் அறிவியல் ஆகியவற்றுடன், கணினி அறிவியல் பாடமும் அறிமுகம்செய்யப்பட்டது.முதலாம் ஆண்டில், கணினி அறிவியலுக்கு புத்தகங்கள் அச்சிடப்பட்டு வினியோகம் செய்யப்பட்டன. அடுத்து வந்த ஆண்டுகளில், கணினி அறிவியல் பாடமும், புத்தகமும் பள்ளிகளுக்கு வழங்கப்படாமல் மாயமாகின. இதற்காக அச்சடிக்கப்பட்ட புத்தகங்கங்கள், பாடநுால் கழக கிடங்கில் முடங்கி, கரையான் அரித்து மக்கும் நிலையில் உள்ளதாக தகவல்கள்வெளியாகி உள்ளன.அனைத்து தனியார் பள்ளிகளிலும், 1ம் வகுப்பு முதல், கணினி அறிவியல் பாடம் மற்றும், 'ஸ்மார்ட் க்ளாஸ்' என்ற கணினி வகுப்பு கண்டிப்பாக நடத்தப்படுகின்றன. அதனால், ௫ம் வகுப்பிலேயே, தனியார் பள்ளி மாணவர்கள், கணினி இயக்கத்தை கற்று, பள்ளி பாடங்களை, 'டிஜிட்டல்' வழியில் படிக்கவும் வகுப்புகள் நடத்தப்படுகின்றன.ஆனால், அரசு பள்ளிகளில், பிளஸ் 1ல் கணினி அறிவியல் என்ற பாடப்பிரிவை எடுத்தால் மட்டுமே கணினி இயக்குதல் குறித்து படிக்க முடியும். அதேநேரம், சில பள்ளிகளில் சிறப்பாசிரியர் என்ற அடிப்படையில், கணினி அறிவியல் பாட ஆசிரியர்கள் தற்காலிகமாக நியமிக்கப்பட்டு உள்ளனர். ஆனால், பாடப் புத்தகமோ, முறையான வகுப்போ, தேர்வோ கிடையாது.

சான்றிதழை ஒப்படைக்க திட்டம்

தமிழ்நாடு பி.எட்., கணினி அறிவியல் வேலையில்லா பட்டதாரி ஆசிரியர் சங்க தலைவர் குமரேசன் கூறியதாவது:தமிழகத்தில் தரம் உயர்த்தப்பட்ட, 2,000 மேல்நிலைப் பள்ளிகளில், கணினி அறிவியல் பாடப்பிரிவே இல்லை. கணினி அறிவியலில், பி.எட்., முடித்தவர்கள், ஆசிரியர் தகுதித் தேர்வான, 'டெட்' தேர்வு எழுத முடியாது; கல்வி அதிகாரி பணிக்கான, ஏ.இ.ஓ., - டி.இ.ஓ., தேர்வையும் எழுத முடியாது.அதனால், 21 ஆயிரம் பேர் கணினி அறிவியல் முடித்து விட்டு, வேலையில்லாமல் தவிக்கிறோம்; போட்டித் தேர்வுக்கும் வாய்ப்பில்லை. எனவே, எங்கள் சான்றிதழ்களை அரசிடம்ஒப்படைக்கும் போராட்டம் நடத்த உள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி