முகநூலில் முதல்வரை விமர்சித்தவர் கைது - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 6, 2016

முகநூலில் முதல்வரை விமர்சித்தவர் கைது

தமிழக முதல்வரை, முகநுாலில் விமர்சனம் செய்தவரை, போலீசார் கைது செய்தனர்.நாகை அடுத்த நாகூரைச் சேர்ந்தவர் முகமது அமீன், 62; தி.மு.க., பிரமுகர். பழைய வாகனங்கள் வாங்கி, விற்பனை செய்யும் புரோக்கராக தொழில் செய்து வருகிறார்.


இவர் தன் முகநுாலில், தமிழக அரசு வழங்கும் நலத்திட்டங்களில், முதல்வர் ஜெ., படம் இருப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, முதல்வரை பற்றி தரக்குறைவாக விமர்சனம் செய்ததாக, நாகூர் நகர அ.தி.மு.க.,வினர் புகார் அளித்தனர்.இதன்படி, நாகூர் போலீசார் வழக்கு பதிந்து, முகமது அமீனை கைது செய்து, சிறையில் அடைத்தனர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி