வருவாய் துறை அதிகாரிகளை தேட வேண்டிய அவசியமில்லை:டூ'ஆன் -லைனில்' பட்டா பெயர் மாற்றம் துவக்கம்! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 15, 2016

வருவாய் துறை அதிகாரிகளை தேட வேண்டிய அவசியமில்லை:டூ'ஆன் -லைனில்' பட்டா பெயர் மாற்றம் துவக்கம்!

இன்று முதல், இணையத்தில் (ஆன் -லைன்) பட்டா பெயர் மாற்றம் செய்யும் பணி துவங்குவதால், அதிகாரிகளை தேடி அலைய வேண்டிய சூழல், விண்ணப்பதார்களுக்கு ஏற்படாது என, வருவாய் துறை தெரிவித்து உள்ளது.காஞ்சிபுரம் மாவட்டத்தில், 12 தாலுகா அலுவலகங்களில்,3,512 கிராமங்கள் உள்ளன. அக்கிராமங்களில் இருக்கும்புஞ்சை, நஞ்சை மற்றும் நத்தம் ஆகிய நிலங்களின், பட்டா பெயர் மாற்றம்,தாலுகா அலுவலகங்களில் செய்யப்பட்டு வந்தன.


விளை நிலங்களுக்கு, கிராம நிர்வாக அலுவலரின் பரிந்துரையிலும், வீட்டுமனைகளை உட்பிரிவுகளாக பிரிக்க, நில அளவையர் (சர்வேயர்) பரிந்துரையிலும், தாசில்தாரிடம் பட்டா பெயர் மாற்றம் செய்ய வேண்டும். பட்டா பெயர் மாற்ற வரும் விண்ணப்பதாரரை, வருவாய் துறைஅதிகாரிகள் அலைக்கழிப்பதாகவும்; குறித்த நேரத்திற்குள் பெயர் மாற்றுவதில்லை எனவும், பெயரை மாற்ற பணம் கேட்பதாகவும் பல குற்றச்சாட்டுகள் எழுந்தன.

இன்று முதல்...இதை தவிர்க்க, மாவட்ட வருவாய் துறை, இணையத்தில் பட்டா பெயர் மாற்றம் செய்ய முடிவு செய்தது. அதில் முதற்கட்டமாக, நஞ்சை, புஞ்சை நிலங்களின் வகையினங்களை, 'அ' பதிவேட்டில் இருந்து, இணையதளத்தில், கிராம நிர்வாக அலுவலர்கள், பதிவேற்றம் செய்து வருகின்றனர்.இணையதளத்தில் பதிவு செய்யும் பணிகள், 90 சதவீதம் முடிவடைந்ததால், இன்றிலிருந்து, வாலாஜாபாத் தாலுகா அலுவலகத்தில், இணையத்தில் பட்டா பெயர் மாற்றம் செய்ய,வசதி செய்யப்பட்டு உள்ளது.

இதுகுறித்து, வருவாய் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:இணையத்தில் பட்டா பெயர் மாற்றம் செய்யும்திட்டத்தை, முதற்கட்டமாக, உத்திரமேரூர் தாலுகாவில் அறிமுகப்படுத்தி உள்ளோம். அங்கு, கணினி சான்றுகள் அளிக்கும் பணிகள் வெற்றிகரமாக நடக்கின்றன.அடுத்ததாக, வாலாஜாபாத் தாலுகாவில், இன்றிலிருந்து இணையத்தில் பட்டா பெயர் மாற்றம் செய்யும் பணிகளை துவக்க, வருவாய் துறை முடிவு செய்துள்ளது.

'விரிவுபத்தப்படும்'

மாவட்டம் முழுவதும், இத்திட்டம் விரைவில் விரிவுபடுத்தப்படும். இந்த திட்டத்தால், வருவாய் துறை சான்றுகள் பெறுவது போல், பட்டா பெயர் மாற்றமும் எளிமையாகிவிடும். இதனால், வருவாய் துறை அதிகாரிகளை தேடி அலைய வேண்டிய அவசியம் இருக்காது.இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி