் ஆசிரியை தற்கொலை: தலைமை ஆசிரியருக்கு 5 ஆண்டுகள் சிறை - புதுக்கோட்டை மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 13, 2017

் ஆசிரியை தற்கொலை: தலைமை ஆசிரியருக்கு 5 ஆண்டுகள் சிறை - புதுக்கோட்டை மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு.

பாலியல் தொல்லையால் அரசுப் பள்ளி ஆசிரியை தற்கொலை செய்து கொண்ட வழக்கில், அப்பள்ளியின் தலைமை ஆசிரியருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து புதுக்கோட்டை மகளிர் நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்தது.
புதுக்கோட்டை காமராஜபுரம் 25-ம் வீதியைச் சேர்ந்தவர் வீராசாமி மனைவி புவனேஸ்வரி(25). புதுக்கோட்டை அருகே உள்ள ராயப்பட்டி அரசு தொடக்கப் பள்ளியில் ஆசிரியையாகப் பணி புரிந்து வந்தார். இவர், கடந்த 2015 மே 7-ம் தேதி உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்துத் தற்கொலை செய்து கொண்டார். இதுதொடர்பாக கணேஷ் நகர் காவல் நிலையத்தினர் வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்தனர்.

விசாரணையில், ஆசிரியை புவனேஸ்வரிக்கு, அப்பள்ளியின் தலைமை ஆசிரியரும், ஊர்க் காவல் படையில் பணியாற்றி யவருமான புதுக்கோட்டை கவிநாடு மேற்கு பகுதியைச் சேர்ந்த கே.மதிவாணன்(45) பாலியல் தொல்லை கொடுத்தது தெரிய வந்துள்ளது. இதை யடுத்து, அவர் கைது செய்யப்பட்டார்.இந்த வழக்கின் விசாரணை புதுக்கோட்டை மகளிர் நீதிமன்றத் தில் நடைபெற்று வந்தது. இவ்வழக்கை விசாரித்த நீதிபதி எ.லியாகத் அலி, குற்றம்சாட் டப்பட்ட கே.மதிவாணனுக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து நேற்று தீர்ப்பளித்தார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி