ஆனர்ஸ் சட்டப் படிப்புக்கு 11-ல் 2-ம் கட்ட கலந்தாய்வு: சட்டப் பல்கலை. அறிவிப்பு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 8, 2017

ஆனர்ஸ் சட்டப் படிப்புக்கு 11-ல் 2-ம் கட்ட கலந்தாய்வு: சட்டப் பல்கலை. அறிவிப்பு

ஐந்தாண்டு ஆனர்ஸ் சட்டப் படிப்புகளுக்கான 2-வது கட்ட கலந்தாய்வு ஜூலை 11-ம் தேதி நடைபெறும் என்று சட்டப் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கி வரும் சீர்மிகு சிறப்பு சட்டக் கல்லூரியில் பிஏ.எல்எல்பி, பிபிஏ.எல்எல்பி, பிகாம்.எல்எல்பி, பிசிஏ.எல்எல்பி ஆகிய 4 விதமான ஆனர்ஸ் சட்டப் படிப்புகள் (5 ஆண்டுகள்) வழங்கப்படுகின்றன.

இந்தபடிப்புகளில் மொத்தம் 610 இடங்கள் உள்ளன.நடப்பு கல்வி ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு கடந்த புதன்கிழமை நடந்தது. அதன்மூலமாக 310 இடங்கள் நிரப்பப்பட்டன. இந்த நிலையில், எஞ்சியுள்ள 200 காலியிடங்களை நிரப்புவதற்கான 2-வது கட்ட கலந்தாய்வு ஜூலை 11-ம் தேதி (செவ்வாய்க்கிழமை) நடைபெறும் என சட்டப் பல்கலைக்கழக பதிவாளரும் சட்டப்படிப்பு மாணவர் சேர்க்கைதலைவருமான வி.பாலாஜி அறிவித்துள் ளார்.2-வது கட்ட கலந்தாய்வுக்கான கட்-ஆஃப் மதிப்பெண்ணும் வெளியிடப்பட்டுள்ளது.

இக்கலந் தாய்வுக்கான அழைப்புக் கடிதம் சம்பந்தப்பட்ட மாணவர்களுக்கு தபால் மூலம் அனுப்பப்பட்டுள்ளது.உரிய கட்-ஆஃப் மதிப்பெண் தகுதியிருந்தும் அழைப்புக் கடிதம் கிடைக்கப்பெறாத மாணவர்கள் பல்கலைக்கழகத்தை தொடர்புகொண்டு மாற்று அழைப்புக் கடிதத்தை பெற்றுக்கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி