சிபிஎஸ்இ தேர்வுகளை முன்கூட்டியே நடத்தும் திட்டமில்லை: மத்திய அரசு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 28, 2017

சிபிஎஸ்இ தேர்வுகளை முன்கூட்டியே நடத்தும் திட்டமில்லை: மத்திய அரசு

சிபிஎஸ்இ பாடத் திட்டத்தின் கீழ் பயிலும் 10 மற்றும் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வுகளை முன்கூட்டியே நடத்தும் திட்டம் இல்லை என்று நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக எழுப்பப்பட்ட கேள்விக்கு மனித வள மேம்பாட்டுத் துறை இணையமைச்சர் உபேந்திர குஷ்வாஹா, மாநிலங்களவையில் வியாழக்கிழமை எழுத்துப்பூர்வமாக பதிலளித்தார். அவர், 10 மற்றும் 12 வகுப்பு பொதுத் தேர்வுகளை முன்கூட்டியே நடத்த வேண்டும் என்று சிபிஎஸ்இ-யிடம் இருந்து பரிந்துரை எதுவும் வரவில்லை என்று பதிலளித்தார்.
சிபிஎஸ்இ பாடத்திட்டத்தின் கீழ் பயிலும் 10 மற்றும் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வுகள் ஆண்டுதோறும் மார்ச் மாதத்தில் நடத்தப்படுகின்றன.

அந்தத் தேர்வுகளை பிப்ரவரி மாதமே நடத்துவதற்கு மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகின. அதையடுத்து, எழுப்பப்பட்ட கேள்விக்கு மத்திய இணையமைச்சர் உபேந்திர குஷ்வாஹா இவ்வாறு பதிலளித்தார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி