பணப்பரிமாற்றத்துக்கான சேவைக் கட்டணத்தை உயர்த்தியது ஸ்டேட் பாங்க் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 12, 2017

பணப்பரிமாற்றத்துக்கான சேவைக் கட்டணத்தை உயர்த்தியது ஸ்டேட் பாங்க்

இந்தியாவின் முன்னணி வங்கிகளில் ஒன்றான எஸ்பிஐ எனப்படும் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா, ஐஎம்பிஎஸ் முறையில் பணப்பரிமாற்றம் செய்வதற்கான சேவைக் கட்டணத்தை உயர்த்தியுள்ளது.



உடனடி பணப்பரிமாற்ற சேவை எனப்படும் ஐஎம்பிஎஸ் (IMPS) முறையில் பணப்பரிமாற்றம் செய்வதற்கான சேவைக் கட்டணம் உயர்த்தப்பட்டிருப்பது குறித்து டிவிட்டரில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

ஜூலை மாதத் துவக்கத்தில், வங்கிப் பணியில் தனது 62வது ஆண்டினை நிறைவு செய்திருக்கும் எஸ்பிஐ, ரூ.1000 வரை ஐஎம்பிஎஸ் முறையில் பணப்பரிமாற்றம் செய்ய எந்த கட்டணமும் விதிக்கப்படவில்லை.

அதே சமயம், ஆயிரம் ரூபாய் முதல் ஒரு லட்சம் ரூபாய் வரையிலான பணப்பரிமாற்றத்துக்கு ரூ.5 கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது ஜிஎஸ்டி வரிக்கு அப்பாற்பட்டது. அதே போல, ரூ.1 லட்சம் முதல் ரூ.2 லட்சம் வரையிலான பணப்பரிமாற்றத்துக்கு ரூ.15 கட்டணம் வசூலிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐஎம்பிஎஸ் முறையில் 24X7 மணி நேரமும் பணப்பரிமாற்றம் செய்யலாம். அதே சமயம், பணப்பரிமாற்றத்துக்கான கோரிக்கை செல்போன் அல்லது இணையதளம் மூலமாக வைக்கப்பட்டதுமே, உடனடியாக பணப்பரிமாற்றம் செய்யப்படும் என்பது இதன் சிறப்பம்சங்களாகும்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி