வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க வேண்டுமா? நாளை சிறப்பு முகாம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 8, 2017

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க வேண்டுமா? நாளை சிறப்பு முகாம்

வாக்காளர் பட்டியல் திருத்தும் பணி சிறப்பு முகாம், நாளை மற்றும் வரும் 23-ம் தேதி நடைபெற உள்ளது என மாவட்டத் தேர்தல் அலுவலரும் பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையாளருமான கார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்,"இந்தியத் தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, 1.1.2017-ம் தேதியை தகுதி நாளாகக்கொண்டு, வாக்காளர்பட்டியலில் விடுப்பட்ட வாக்காளர்கள், இளம் வாக்காளர்கள் மற்றும் தகுதி வாய்ந்த மாற்றுத் திறனாளிகளை வாக்காளர் பட்டியலில் சேர்த்தல் தொடர்பான சிறப்புப் பணிகள், 1.7.2017 முதல் 31.7.2017 வரை நடைபெறும்.தேர்தல் ஆணையத்தின் அறிவுரையின்படி, வருகிற 9.07.2017 (நாளை) மற்றும் 23.07.2017 ஆகிய இரு நாள்களில், அனைத்து வாக்குச் சாவடி மையங்களிலும் சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளது.

எனவே, 18 முதல் 21 வயது நிறைவடைந்த இளம் வாக்காளர்கள், மாற்றுத் திறனாளிகள், மேற்கண்ட சிறப்பு முகாம் நாள்களில் முகாமிற்குச் சென்று, இந்தவாய்ப்பை நல்ல முறையில் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்" எனக் கேட்டுக்கொண்டுள்ளார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி