அரசு பள்ளி மாணவர்களின் வாசிப்பு, எழுதுதல் திறன் சோதனை. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 10, 2017

அரசு பள்ளி மாணவர்களின் வாசிப்பு, எழுதுதல் திறன் சோதனை.

அனைவருக்கும் கல்வி இயக்கம் மூலம் அரசு பள்ளி மாணவர்களின் வாசிப்பு, எழுதுதல் திறன் சோதனை செய்யப்பட உள்ளன.அரசுப் பள்ளி மாணவர்களில்,
பெரும்பாலானோருக்கு வாசிக்க தெரியவில்லை என்ற புகார் பரவலாக உள்ளது.

இதனை தடுக்கும் வகையில் அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் ஆண்டுதோறும் அரசு மற்றும் உதவிபெறும் தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் இரண்டு முதல் எட்டாம் வகுப்பு வரை மாணவர்களின் அடைவுத்திறன் சோதிக்கப்படுகிறது.
தமிழ், ஆங்கிலம் ஆகிய பாடங்களை வாசித்தல் மற்றும் எழுதுதல், கணிதத்தில் எளிய, கடின கணக்குகளை செய்தல் போன்றவை சோதிக்கப்படும். கடந்த காலங்களில் சில குறிப்பிட்ட பள்ளிகளில் மட்டுமே இந்த சோதனை நடத்தப்பட்டது.
தற்போது அனைத்து பள்ளி மாணவர்களுக்கும் விடுதலின்றி சோதனை நடத்த வேண்டுமென, அனைவருக்கும் கல்வி இயக்க மாநில திட்ட இயக்குனர் நந்தகுமார் தெரிவித்துள்ளார். இந்த தேர்வு ஜூலை முதல் ஆகஸ்ட் 15 வரை மாவட்டத்தில் 50 சதவீத பள்ளிகளிலும், ஆகஸ்ட் முதல் செப்டம்பர் 15 வரை மீதமுள்ள 50 சதவீதம் பள்ளிகளிலும் நடத்தப்பட உள்ளது.

இதில், பின்தங்கும் மாணவர்களுக்கு வாசித்தல் எழுதும் திறனில் சிறப்பு பயிற்சி வழங்கப்படும் என, அனைவருக்கும் கல்வி இயக்க அதிகாரிகள் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி