நாட்டில் 37%-க்கும் மேலான பள்ளிகளில் மின்சார வசதி இல்லை... : ஆய்வறிக்கையில் தகவல். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 4, 2017

நாட்டில் 37%-க்கும் மேலான பள்ளிகளில் மின்சார வசதி இல்லை... : ஆய்வறிக்கையில் தகவல்.

டெல்லி: நடப்பாண்டு மார்ச் மாதம் வரையிலான கணக்கெடுப்பின் படி நாட்டிலுள்ள 37 சதவீதத்திற்கும் அதிகமான பள்ளிகளில் மின்சார வசதியே இல்லை என்ற தகவல் தெரிய வந்துள்ளது.
இதுபற்றி கேள்வி ஒன்றிற்கு மாநிலங்களவையில் மனிதவள மேம்பாட்டு துறை இணையமைச்சர் உபேந்திர குஷ்வாகா, எழுத்து மூலம் பதிலளித்துள்ளார். அவரது பதிலில் நாடு முழுவதிலுமுள்ள பள்ளிகளில், தேசிய கல்வி திட்ட பல்கலை மற்றும் நிர்வாகம் சார்பில் ஆய்வு நடத்தப்பட்டது. இந்த ஆய்வானது  உள்கட்டமைப்பு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் எவ்வாறு செய்யப்பட்டுள்ளது என்பதை சாராம்சமாக கொண்டிருந்தது.

ஆய்வின் இறுதியில் நாட்டிலுள்ள 62.81 சதவீதம் பள்ளிகளில் மட்டுமே உள்கட்டமைப்பு வசதிகளில் முக்கியமானதான மின்சார வசதி உள்ளதாக கண்டறியப்பட்டது. மேலும் பள்ளிகளில் மின்சார வசதி கொண்ட மாநிலங்களின் பட்டியலில் ஜார்கண்ட் மாநிலமே கடைசி இடத்தில் உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஜார்கண்டில் 19% பள்ளிகளில் மட்டுமே மின்சார வசதி உள்ளது. ஜார்கண்ட் மாநிலத்தை அடுத்து மின்வசதி குறைவாக கொண்ட பள்ளிகள் உள்ள மாநிலங்கள் அசாம் - 25%, மேகாலயா - 28.54%, பீகார் - 37.78%, மத்திய பிரதேசம் - 28.80%, மணிப்பூர் - 39.27%, ஒடிசா - 33.03%, திரிபுரா - 29.77% உள்ளிட்டவை என கூறப்பட்டுள்ளது. மேலும் பாண்டிச்சேரி, டாமன், டயூ, லட்சத்தீவு, டெல்லி, சண்டிகர், தாபர் உள்ளிட்ட யூனியன் பிரதேசங்களில் உள்ள பள்ளிகள் 100 சதவீதம் மின்சார வசதி உள்ளதாக ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி