எம்.எல்.ஏ-க்களுக்கு ஏன் இவ்வளவு சம்பளம்? - உயர் நீதிமன்றம் அதிரடி - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 4, 2017

எம்.எல்.ஏ-க்களுக்கு ஏன் இவ்வளவு சம்பளம்? - உயர் நீதிமன்றம் அதிரடி

சமீபத்தில் நடந்த சட்டமன்றக் கூட்டத்தொடரின்போது, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, எம்.எல்.ஏ-க்களின்சம்பளத்தை 55,000 ரூபாயிலிருந்து 1,05,000 உயர்த்தினார்.
இந்த அறிவிப்பு சர்ச்சையைக் கிளப்பிய நிலையில், இதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு தொடரப்பட்டது. இன்று அந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது, 'தமிழக மக்கள் வறுமையில் தவித்து வரும் நிலையில் எம்.எல்.ஏ-க்களுக்கு சம்பள உயர்வு தேவையா?வறுமை, விவசாயிகள் தற்கொலை, கல்விக் கடனைத் திருப்பி செலுத்த முடியாத நிலையில் தமிழகம் தவித்து வருகிறது.

இந்த நிலையில் எம்.எல்.ஏ-க்களுக்கு சம்பள உயர்வு தேவைதானா? சம்பள உயர்வு அளிப்பது அரசின் கொள்கை முடிவு. அதில் நாங்கள் தலையிட முடியாது. ஆனால், தங்களுக்கு வழங்கப்பட்டுள்ள சம்பள உயர்வு சரியானதுதானா என்பது பற்றி எம்.எல்.ஏ-க்கள்தான் முடிவு செய்ய வேண்டும்' என்று உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பி வழக்கைத் தள்ளுபடி செய்தது.  தமிழகத்துக்கு கிட்டத்தட்ட 40,000 கோடி ரூபாய் அளவுக்கு கடனிருப்பது பற்றி இந்தப் பொது மனுவில் குறிப்பிடப்பட்டது.

3 comments:

  1. 2013 ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றோர் கவனத்திற்கு

    2013 ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றோர்க்கு
    பணி, முன்னுரிமை, சலுகை மதிப்பெண் வழங்க கோரி,
    போராட்டம்! போராட்டம்! போராட்டம்!

    அனைவரும் வாரீர்!


    நாள்: 08:08:2017 செவ்வாய்கிழமை
    நேரம்: காலை 10:30
    இடம்: முதன்மை கல்வி அலுவலகம்
    திருச்சி

    🙏 தமிழாசிரியனே! தன்மானம் காக்க வா!
    தகுதிதேர்வில் தேர்ச்சி பெற்றது தப்போ!
    நீ போராடுவது எப்போ!
    சோழநாடு பாண்டியனிடம் முறையிட்டது அப்போ!
    பாண்டியநாட்டில் ஆரம்பித்து
    சோழநாட்டில் முறையிடுவோம் இப்போ!

    🙏 ஆங்கில ஆசிரியனே!
    சேக்ஸ்பியர் சொன்னால்தான் உன்செவியேறுமா?
    செவனே என இருந்தால் உன்நிலை மாறுமா?
    உன் காயம் ஆறுமா?
    ஆறனுமா?
    அணிவகுத்து கிளம்புமா!

    🙏 கணித ஆசிரியனே!
    எந்த விதியை கண்டும் கலங்காதவனே!
    உன் விதியை மாற்றுவது யார்?
    கண்ணீரை உதிரமாக மாற்றியவனே!
    காவிரி மண்ணிற்கு வா! -உன்
    கண்ணீரை கழுவிவிட்டு போ!

    🙏அறிவியல் ஆசிரியனே!
    நீயுட்டன் விதியை மறந்து விட்டாயா?
    ஒவ்வொரு வினைக்கும்
    அதற்கு சமமான எதிர்வினை உண்டு.
    நீ ஏதேனும் வினை புரிந்தாயா? -எந்த
    போராட்டத்திற்கும் துணைநின்றாயா?
    நான்கு பிரிவாய் பிரிந்தவனே!
    நான்காண்டு துன்பம் கண்டவனே!
    நான்கு கோரிக்கை கொண்டவனே!
    நான்கெழுத்து ஊருக்கு வா!
    இதயத்திற்கு நான்கு அறை.
    இனியும் தாமதித்தால் எப்போது போவாய்
    கல்விதுறை.
    கனலாய் வா!

    🙏சரித்திர ஆசிரியனே!
    வரலாற்றில் எத்தனையோர் படையெடுத்தான்.
    நீ மட்டும் ஏன் கடையடைத்தாய்.
    சரித்திரத்தை மாற்றிய திருச்சியில்
    உன்
    கரு திரத்தை பதிவு செய்!
    உனக்கான பணியை உறுதி செய்!

    🙏 அனைவரும் வாருங்கள் ஆதரவு தாருங்கள்

    இடைநிலை ஆசிரியரை விட்டு விட்டு
    அழைப்பு விடுக்கிறான்
    என யாரும் கருத வேண்டாம்.
    அழைப்பதே இடைநிலை ஆசிரியர் தான்.
    நன்றி
    ம.இளங்கோவன்MA MPhil Bed Dted, DSS ,TPT ,

    2013 ஆசிரியர் தகுதிதேர்வில் தேர்ச்சி
    பெற்றோர் கூட்டமைப்பு.




    மாநில தலைமை ஒருங்கிணைப்பாளர்கள்
    வடிவேல் சுந்தர் 8012776142.
    இளங்கோவன் 8778229465
    மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள்
    கோவை திரு கார்த்திகேயன்.📞8870452224

    தேனி திரு.தினகரன் 📞9585655579

    திருவண்ணாமலை
    திரு.ஏகாம்பரம் 📞9025342468

    தஞ்சாவூர் திரு பிரேம்குமார் 📞9597200610

    கடலூர் திரு பிரகாஷ் 📞9976977210

    சேலம் திரு ரமேஷ்கார்த்திக் 📞8344941224

    நெல்லை திரு முருகேசன் 📞 9500959482

    திருவாரூர் திரு பிராபாகரன் 📞9047294417

    சென்னை திரு ஆசிக் 📞7010717988

    விருதுநகர் சங்கர் 📞9626580093

    புதுக்கோட்டை திரு பழனியப்பன்📞9787481333

    வேலூர் திரு தினேஷ் 📞9025938592

    குமரி & தூத்துகுடி
    திரு ஜான் சாமுவேல் 📞9123586458

    காஞ்சிபுரம் திரு.ராமராசு 📞9952439500
    & ரவிவர்மன் 📞9884987851.

    மதுரை & திரு சங்கர் 📞9626580093
    ராமநாதபுரம் சிவ கங்கை

    நாகபட்டினம் திரு ராதாகிருஷ்ணன் 📞8248087664

    ReplyDelete
  2. This comment has been removed by the author.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி