உயிரை துச்சமென நினைத்து வெடிகுண்டை தோளில் சுமந்து ஓடி பள்ளி மாணவர்களை காப்பாற்றிய காவலர் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 28, 2017

உயிரை துச்சமென நினைத்து வெடிகுண்டை தோளில் சுமந்து ஓடி பள்ளி மாணவர்களை காப்பாற்றிய காவலர்


மத்தியப்பிரதேசத்தில் உள்ள சாகர் என்ற மாவட்டத்தில் சிதோரா என்றொரு கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் உள்ள பள்ளியில் சுமார் 400-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர்.
அந்த பள்ளியிலிருந்து காவல்துறையினருக்கு தொலைபேசி அழைப்பு வந்துள்ளது. அதில் பேசிய பள்ளி நிர்வாகத்தினர் தங்களது பள்ளி மைதானம் அருகே வெடிகுண்டு போன்ற மர்ம பொருள் ஒன்று கிடப்பதாக பதற்றத்துடன் கூறியுள்ளனர். இதனையடுத்து காவல் நிலையத்தில் இருந்த தலைமை காவலர் ல் என்பவர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றார். அங்கு சோதனையில் ஈடுபட்ட அவர் பள்ளி மைதான வளாகத்தில் சுமார் 10 கிலோ எடை கொண்ட வெடிகுண்டு இருப்பதை கண்டு அதிர்ந்தார்.

பின்னர் சுதாரித்து துரிதமாக செயல்பட நினைத்த அவர் பள்ளி மாணவர்களை காப்பாற்றுவதற்காக வெடிகுண்டை தூக்கி கொண்டு வேக வேகமாக யாரும் இல்லாத பகுதிக்கு ஓடியுள்ளார். மாணவர்கள் மற்றும் மக்கள் யாருடைய உயிருக்கும் சேதம் ஏற்பட்டு விட கூடாது என்ற நோக்கில் சுமார் 1 கி.மீ தூரம் தனது உயிரை பணயம் வைத்து வெடிகுண்டை தோளில் தூக்கி வைத்தபடி ஓடினார். யாரும் இல்லா பகுதிக்கு எடுத்து சென்று பின் அந்த வெடிகுண்டை அப்புறப்படுத்தியுள்ளார். பின் நடத்தப்பட்ட விசாரணையில், அந்த வெடிகுண்டு ராணுவத்தில் பயன்படுத்தப்பட்டது என்பது தெரிய வந்தது. இதுதொடர்பான புகைப்பட காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகின்றன தனது உயிரை பற்றி சிற்தும் யோசிக்காமல் துணிச்சலுடன் மாணவர்களின் உயிரை காப்பாற்றிய தலைமை போலீஸ் காவலருக்கு நாடு முழுவதும் இருந்து பல்வேறு தரப்பினர் பாராட்டுக்களை தெரிவித்துள்ளனர். துணிச்சல் காவலரான அபிஷேக் படேலை கவுரவிக்கும் விதமாக  அம்மாநில முதல்வர் சிவராஜ்சிங் சவுகான், அபிஷேக்கிற்கு ரூ.50,000 பரிசு வழங்கியுள்ளார். 

14 comments:

  1. தலைமை காவலரின் துணிச்சலான செயலுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. நீவீர் தான் மாவீரன்.

    ReplyDelete
  3. Manavargalai kapatriya ,kavalarku manamarntha nanri.

    ReplyDelete
  4. தலைமை காவலரின் துணிச்சலான செயலுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்

    ReplyDelete
  5. Great we should honour of his own risk

    ReplyDelete
  6. தலைமை காவலரின் துணிச்சலான செயலுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்

    ReplyDelete
  7. vanakathirkuriya kaavalarea neer vaazhlga..um kulam vaazhga..entrum ulagam potrum veera kaavalaraga neengal vaazhga sir..

    ReplyDelete
  8. வாழ்த்துக்கள் நாடு பாராட்டும்

    ReplyDelete
  9. 24 * 365 ipadi uzhaipavargal than police. Avargal kudumbathai vitutu intha natukkaga padupadubavarglil ranuvam muthal idam police 2 idam. Ithai anaivarum purinthu kolla vendum.intha oru police Ku mattum illai ithu pol veliyil theriyatha athanai police kum salute

    ReplyDelete
  10. Congrats Humanity is living through these selfless people A model for us

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி