NEET விலக்கு அளிக்க ஒப்புதல். (News Update) - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 16, 2017

NEET விலக்கு அளிக்க ஒப்புதல். (News Update)


நீட் தேர்வில் இருந்து விலக்கு கோரும் தமிழக அரசின்  அவசர சட்டவரைவுக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. தமிழக அரசின் அவசர சட்ட வரைவுக்கு மத்திய சட்ட அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது.
நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு ஓராண்டு விலக்கு அளிக்க அரசு அவசர சட்டம் இயற்றியது. தமிழக அரசின் அவசர சட்ட வரைவு 14 ல் மத்திய அரசின் 3 துறைகளிடம் ஒப்படைக்கப்பட்டது. தமிழக அவசர சட்டவரைவு சரியானதே என்று தலைமை வக்கீல் வேணுகோபாலும் கருத்து தெரிவித்துள்ளார்.

அவசர சட்டம் கொண்டுவர தமிழக அரசுக்கு அதிகாரம் உள்ளது என்று மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் கூறியுள்ளார். அவசர சட்டவரைவுக்கு மத்திய சுகாதாரம் மற்றும் மனிதவள மேம்பாட்டு அமைச்சகங்கள் ஒப்புதல் அளிக்க வேண்டும் என்றும் வழக்கறிஞர் கூறியுள்ளார். தமிழக நீட் அவசர சட்ட வரைவு 2 நாட்களுக்கு முன் உள்துறை அமைச்சகத்திடம் சமர்ப்பிக்கப்பட்டது. 

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி