நீட் போராட்டம் தமிழகத்தில் கட்டுப்பாட்டில் உள்ளதா? - 2 வாரத்தில் பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவ - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 19, 2017

நீட் போராட்டம் தமிழகத்தில் கட்டுப்பாட்டில் உள்ளதா? - 2 வாரத்தில் பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவ

நீட் தேர்வால் பாதிக்கப்பட்ட மாணவி அனிதா தற்கொலை செய்துகொண்டார். இதனால் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்றன. இதை தொடர்ந்து தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு பாதுகாக்கக் கோரி ஜி.எஸ்.மணி என்பவர் உச்ச நீதிமன்றத்தில் மனு அளித்தார்.
இதை விசாரித்த அமர்வு, நீட் தேர்வுக்கு எதிராக போராட தடை விதித்து, சட்டம்-ஒழுங்கை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க தமிழக அரசுக்கு கடந்த செப்.8-ல் உத்தரவிட்டது.இந்நிலையில், இவ்வழக்கு தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் ஏ.எம்.கான்வில்கர், டி.ஒய்.சந்திரசூட் ஆகியோரைக் கொண்ட அமர்வில் நேற்று மீண்டும்விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், தமிழகத்தில் நீட் தேர்வுக்கு எதிரான போராட்டத்தை கட்டுப்படுத்த எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து தமிழக அரசு முதன்மைச் செயலாளர் 2 வாரத்துக்குள் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை அக். 19-க்கு தள்ளிவைத்தனர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி