இணைக்கப்பட்ட 6 வங்கிகளின் காசோலைகள் செப்டம்பர் 30க்குப் பின் செல்லாது: எஸ்பிஐ அறிவிப்பு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 21, 2017

இணைக்கப்பட்ட 6 வங்கிகளின் காசோலைகள் செப்டம்பர் 30க்குப் பின் செல்லாது: எஸ்பிஐ அறிவிப்பு.

ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா வங்கியுடன் இணைந்த 6 துணை வங்கிகளின் காசோலைகள் செப்டம்பர் 30ம் தேதிக்குப் பிறகு செல்லாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.


எனவே, அந்த 6 வங்கிக் கிளைகளிலும் கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளர்கள் இந்திய பினான்சியல் சிஸ்டம் (IFS) கோட் கொண்ட புதிய காசோலைப் புத்தகங்களைப் பெற்றுக் கொள்ளுமாறும் எஸ்பிஐ அறிவுறுத்தியுள்ளது.

பாரதிய மகிலா வங்கியில் கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளர்களின் காசோலைகள் செப்டம்பர் 30ம் தேதிக்குப் பிறகு செல்லாது என்பதால் அதனை பயன்படுத்த வேண்டாம் என்றும் அறிவுறுத்தியுள்ளது.



இதில்லாமல், ஸ்டேட் பாங்க் ஆஃப் பாட்டியாலா, ஸ்டேட் பாங்க் ஆப் பிகானீர் மற்றும் ஸ்டேட் பாங்க் ஆஃப் ஜெய்ப்பூர், ஸ்டேட் பாங்க் ஆஃப் ராய்ப்பூர், ஸ்டேட் பாங்க் ஆஃப்  திருவாங்கூர், ஸ்டேட் பாங்க் ஆஃப் ஹைதராபாத் ஆகிய ஆறு வங்கிகளின் கிளைகளில் கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளர்கள் புதிய காசோலைகளைப் பெற்றுக் கொள்ளுமாறு அறிவுறுத்தியுள்ளது.

இந்த ஆறு வங்கிகளும் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவுடன் இணைந்து விட்டதால், வங்கிகளின் பழைய காசோலைகளும், அதன் ஐஎஃப்எஸ் கோட் எண்களும் செல்லாதவையாக அறிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி