தன் பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம்: அரசு தரப்பில் பதில் மனு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 19, 2017

தன் பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம்: அரசு தரப்பில் பதில் மனு

தன் பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் அரசின் பங்களிப்பு என்ன என்பது குறித்துப் பதிலளிக்க சென்னைஉயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அதன்படி அரசு தரப்பில் திங்கள்கிழமை பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
நீட் தேர்வால் பாதிக்கப்பட்ட மாநில பாடத்திட்ட மாணவர்களுக்கும், அவர்களின் பெற்றோருக்கும் மனநல ஆலோசனை வழங்க தமிழக அரசுக்கு உத்தரவிடக் கோரி வழக்குரைஞர் ஏ.பி.சூர்யபிரகாசம் உயர் நீதிமன்றத்தில்மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி என்.கிருபாகரன் இதுதொடர்பாக ஆசிரியர் சங்கங்களுக்கு பல்வேறு கேள்விகளை எழுப்பினார். மேலும் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் தன் பங்களிப்பு ஓய்வூதியம் பற்றியும் , அதில் அரசின் பங்களிப்பு என்ன என்பது குறித்தும் கேள்விகளை எழுப்பி அதற்கு பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்டிருந்தார். இந்நிலையில் இந்த வழக்கு திங்கள்கிழமை, நீதிபதி என்.கிருபாகரன் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு கூடுதல் தலைமை வழக்குரைஞர் மற்றும் அரசு கூடுதல் வழக்குரைஞர் ஆகியோர் ஆஜராகி நிதித்துறை (செலவினப் பிரிவு) செயலாளர் எம்.ஏ.சித்திக் சார்பில் பதில் மனுவை தாக்கல் செய்தனர்.

அதில், பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்துக்காக ஒவ்வோர் அரசு ஊழியரும் தனது மாதாந்திர அடிப்படை சம்பளத்தில் இருந்து 10 சதவீதத்தை பங்களிப்பாகச் செலுத்தி வருகின்றனர். ஊழியர்களின் பங்களிப்புத் தொகையோடு, அரசும் தன் பங்களிப்பை தவறாமல் பொதுக் கணக்கில் செலுத்தி வருகிறது. கடந்த 2017 மார்ச் 31-ஆம் தேதி வரை இந்தத் தொகை வட்டியுடன் சேர்த்து ரூ. 18 ஆயிரத்து 16 கோடியாக உள்ளது. 2016-2017 ஆம் ஆண்டுக்கான கணக்கு விவரங்களும் தனித்தனியாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இந்தத் தகவல்கள் இணையதளத்திலும் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.பணி ஓய்வு, திடீர் மரணம், பணிநீக்கம் செய்யப்படும் ஊழியர்களுக்கு உடனடியாக அவர்களின் கணக்கு முடிக்கப்பட்டு ஓய்வூதியத் தொகை வழங்கப்பட்டு வருகிறது.கருவூல கணக்குத்துறை அறிக்கையின்படி கடந்த ஆக. 31-ஆம் தேதி வரை தன் பங்களிப்பு ஓய்வூதியக் கணக்கை முடித்து வழங்கக்கோரி 7,409 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன.

அதன்படி ஓய்வுபெற்ற, ராஜினாமா செய்த மற்றும் இறந்த ஊழியர்களின் சார்பில் 3,288 விண்ணப்பங்கள் பெறப்பட்டு ரூ.125 கோடியே 24 லட்சத்து 24 ஆயிரத்து 317-க்கு இறுதி ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. தமிழக அரசு இந்த திட்டத்தின் கீழ் தொய்வின்றி தனது பங்களிப்பை வழங்கி வருகிறது என பதில் மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து வழக்கின் விசாரணையை நீதிபதி, வரும் செப்.22-ஆம் தேதிக்கு தள்ளி வைத்தார்.

3 comments:

  1. வெயிட்டேஜ் மாற்றி அமைக்கபடுவதால்.....

    உங்களுக்கு வேலை இல்லையாம்

    நீங்ள் அரசுஆசிரியராக முடியாது

    தற்போதைய உங்கள் பொருளாதார சூழல் மேலும் பின்னடைவை சந்திக்கும்.

    நம்ம point ல இருக்கோம் எப்படி போட்டாலும் வந்துடும்னு நினைச்சீங்க!
    எப்படி போட்டா நீங்க வேலைக்கு போக முடியாதோ அப்படி போட உள்ளனர்

    மறவாதீர் உங்கள் கனவு கனவாகவே போகிறது
    சிந்திப்பீர்! நடைமுறை வெயிட்டேஜ் பின்பற்ற வேண்டும்.
    வெயிட்டேஜ் முறையை ஏற்று கொண்ட நண்பர்களின் கவனத்திற்கு!

    நாம் அனைவரும் வெயிட்டேஜ் ஆதரவாளர்கள் கிடையாது. அதே வேளையில் சரியோ தவறோ இம்முறையை ஏற்றுகொண்டவர்கள்.
    இப்போது நாம் ஒரு வரிசையில் நிற்கிறோம். இப்போது வரிசையை மாற்றி அமைத்தால் நிச்சயம் நாம் பாதிக்கபடுவோம்.
    1 வெயிட்டேஜ் முறையை மாற்றிைாலோ நீக்கினாலோ நிச்சயம் நாம் பாதிக்கபடுவோம்
    2வெயிட்டேஜ் மாற்றினால் மீண்டும் வழக்கிற்கு வழிவகுக்கும்
    3 உண்மைக்கு புறம்பாக நிறைய பேர் பட்டியலில் இடம் பெறுவர்
    4 விரைவாக செயல்படவேண்டிய தருணம் மறவாதீர் வெற்றிகனிக்கு மிக அருகில் உள்ளோம்
    5நீங்கள் செய்ய வேண்டியது இதுதான் கீழ்கண்ட படிவத்தை நிரப்பி கையொப்பம் இட்டு முடிந்தால் புகைப்படம் இணைத்து தெளிவாக எடுத்து குழுவில் அனுப்பவும்.
    100 க்குறைவானவர்கள் திரும்ப திரும்ப அமைச்சரை அணுகி வெயிட்டேஜ் மாற்ற கோரி நிர்பந்திக்கின்றனர். அமைச்சரும் தற்போது அவர்களது பக்கம் சாய்ந்தது போல் தெரிகிறது.
    இந்த பிரச்சனைக்கு தீர்வு காணும் விதமாக வெயிட்டேஜிக்கு 500 பேரின் ஒப்புதல் கடிதத்தை முதல்வர் மற்றும் அமைச்சரிடம் நேரில் சந்தித்து ஒப்படைக்க உள்ளோம்.
    உங்கள் நண்பர்களிடம் விபரத்தை கூறி படிவத்தை அனுப்பவும். நன்றி

    குறிப்பு: பாதிக்கபட்டவர்களை அழைத்து பேசம்படும் என்று அமைச்சர் கூறி உள்ளார்.
    ஒப்புதல் கடிதம் அளிப்பவர்கள் பாதித்தவர்களாக கருதபடுவர் என்பதை மறந்துவிடாதீர்.

    விபரீதத்தை உணர்வீர். விரைந்து செயல்படுவீர்!

    மாதிரி படிவம்:

    ஆசிரியர் தகுதிதேர்வில் நடைமுறையில் உள்ள (அரசாணை 71 ) வெயிட்டேஜ் முறையை பின்பற்ற வேண்டுகிறோம்.

    பெயர் : க.பாரதி கண்ணன்
    பதிவு எண்: 13TE20209111
    அலைபேசி : 950095482
    முகவரி : 11/2 அன்னை இல்லம்
    லெட்சுமிபுரம்,
    காந்திதெரு, 
    திருமயம் வடக்கு,
    புதுக்கோட்டை -612043

    மதிப்பிற்குறிய ஐயா வணக்கம்.
    ஆசிரியர் நியமனத்தில் புரட்சி தலைவி அம்மா அவர்கள் ஆட்சியின் கீழ் கொண்டு வந்த அறிவியல் பூர்வமான வெயிட்டேஜ் முறையை தொடர்ந்து நடைமுறைபடுத்த தங்களை வேண்டி விரும்பி கேட்டுக் கொள்கிறேன்.
    தங்கள் உண்மையுள்ள ....
    (தேர்வரின் கையொப்பம்)

    முடிந்த அளவில் புகைப்படம் இணைத்து அனுப்பவும்
    மேற்குறிப்பிட்ட விபரங்களை A4 தாளில் நிரப்பி கையொப்பமிட்டு தெளிவாக புகைபடமெடுத்து கீழ்கண்ட
    WhatsApp எண்ணிற்கு அனுப்பவும்.
    Cell No :9500959482
    99426 61187
    90472 94417

    ReplyDelete
  2. 2017 பேட்ச் வந்தா நீங்க எந்த பாயின்ட்ல நிப்ப

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி