பி.டி.எஸ்., காலியிடங்களுக்கு இன்று நடக்குது, 'கவுன்சிலிங்' - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 5, 2017

பி.டி.எஸ்., காலியிடங்களுக்கு இன்று நடக்குது, 'கவுன்சிலிங்'

சுயநிதி மருத்துவக் கல்லுாரிகளில், பி.டி.எஸ்., எனப்படும், பல் மருத்துவ படிப்பில், 1,122 இடங்கள் காலியாக உள்ளன. அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு, இன்று கவுன்சிலிங் நடக்கிறது.தமிழகத்தில், 'நீட்' தேர்வு அடிப்படையில், மருத்துவ மாணவர் சேர்க்கை நடந்து வருகிறது.
அரசு, சுயநிதி கல்லுாரிகளில், எம்.பி.பி.எஸ்., இடங்கள் அனைத்தும் நிரம்பி, வகுப்புகள் நேற்று துவங்கி விட்டன. அரசு ஒதுக்கீட்டில் உள்ள, பி.டி.எஸ்., இடங்களுக்கு, நேற்று நடந்த கவுன்சிலிங்கில், 15 இடங்கள் நிரம்பின. இதனால், மொத்தமுள்ள, 1,045 பி.டி.எஸ்., இடங்களில், 604 இடங்கள் நிரம்பி உள்ளன; 441 இடங்கள் காலியாக உள்ளன.
சுயநிதி மருத்துவக் கல்லுாரிகளில் நிர்வாக ஒதுக்கீட்டில் உள்ள, 715 பி.டி.எஸ்., இடங்களில், 34 இடங்கள் மட்டுமே நிரம்பியுள்ளன; 681 இடங்கள் காலியாக உள்ளன. இதையும் சேர்த்தால், அரசு ஒதுக்கீடு மற்றும் நிர்வாக ஒதுக்கீட்டில், 1,122 பி.டி.எஸ்., இடங்கள் காலியாக உள்ளன. இன்று, அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கும், நாளை, நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கும் கவுன்சிலிங் நடைபெறுகிறது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி