வேலைவாய்ப்பற்றோருக்கான அரசின் உதவித்தொகை பெறும் இளைஞர்கள் தங்களது வங்கிக்கணக்கு, வேலைவாய்ப்புப்பதிவு அட்டையுடன் ஆதார் எண்ணையும் இணைக்க வேண்டுமென அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் சு. கணேஷ் வெளியிட்ட தகவல்:
தமிழக அரசால் அறிவிக்கப்பட்டுள்ள வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவித்தொகை திட்டத்தின் கீழ் வேலைவாய்ப்பகத்தில் பதிவு செய்து எவ்வித வேலைவாய்ப்பும் கிடைக்காமல் பல ஆண்டுகளாகக் காத்திருக்கும் இளைஞர்கள் மற்றும் அனைத்து வகையான மாற்றுத்திறனாளிகளுக்கும் அரசு விதிமுறைகளின்படி உதவித்தொகை வழங்கப்படுகிறது.
மேற்காணும் உதவித்தொகையை இவ்வலுவலகம் மூலம் பெற்றுவரும் பயனாளிகள் அனைவரும் தங்களது வங்கிக் கணக்கிலும், தங்களது வேலைவாய்ப்பு பதிவு அட்டையிலும் ஆதார் எண்ணை இணைக்க வேண்டுமென அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே உதவித்தொகை பெற்றுவரும் அனைத்து பயனாளிகளும் தங்களது ஆதார் அட்டை, வங்கிப்புத்தகம், மாற்றுத்திறனாளிகளாக இருப்பின் ஊனமுற்றோருக்கான அடையாள அட்டை மற்றும் வேலைவாய்ப்பக அட்டையுடன் அலுவலக வேலை நாட்களில் புதுக்கோட்டை மாவட்ட வேலைவாய்ப்பகத்துக்கு நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ விவரங்களை அளிக்க வேண்டும்.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் சு. கணேஷ் வெளியிட்ட தகவல்:
தமிழக அரசால் அறிவிக்கப்பட்டுள்ள வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவித்தொகை திட்டத்தின் கீழ் வேலைவாய்ப்பகத்தில் பதிவு செய்து எவ்வித வேலைவாய்ப்பும் கிடைக்காமல் பல ஆண்டுகளாகக் காத்திருக்கும் இளைஞர்கள் மற்றும் அனைத்து வகையான மாற்றுத்திறனாளிகளுக்கும் அரசு விதிமுறைகளின்படி உதவித்தொகை வழங்கப்படுகிறது.
மேற்காணும் உதவித்தொகையை இவ்வலுவலகம் மூலம் பெற்றுவரும் பயனாளிகள் அனைவரும் தங்களது வங்கிக் கணக்கிலும், தங்களது வேலைவாய்ப்பு பதிவு அட்டையிலும் ஆதார் எண்ணை இணைக்க வேண்டுமென அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே உதவித்தொகை பெற்றுவரும் அனைத்து பயனாளிகளும் தங்களது ஆதார் அட்டை, வங்கிப்புத்தகம், மாற்றுத்திறனாளிகளாக இருப்பின் ஊனமுற்றோருக்கான அடையாள அட்டை மற்றும் வேலைவாய்ப்பக அட்டையுடன் அலுவலக வேலை நாட்களில் புதுக்கோட்டை மாவட்ட வேலைவாய்ப்பகத்துக்கு நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ விவரங்களை அளிக்க வேண்டும்.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி