பிஎஸ்சி நர்சிங், பிபார்ம் படிப்புகளுக்கு பொது கலந்தாய்வு தொடக்கம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 21, 2017

பிஎஸ்சி நர்சிங், பிபார்ம் படிப்புகளுக்கு பொது கலந்தாய்வு தொடக்கம்

தமிழகத்தில் அரசு, தனியார் கல்லூரிகளில் மருத்துவம் சார்ந்த பட்டப்படிப்புகளான பிஎஸ்சி நர்சிங், பிபார்ம், பிபிடி உட்பட 9 பட்டப்படிப்புகள் உள்ளன. 16 அரசு மருத்துவக் கல்லூரிகளில் 538 இடங்கள் மற்றும் 159 தனியார் மருத்துவக் கல்லூரிகளில் 5,726 இடங்கள் இருக்கின்றன.
இந்தப் படிப்புகளுக்கு 2017-18 கல்வி ஆண்டில் மாணவர் சேர்க்கைக்கான பொது கலந்தாய்வு நேற்று தொடங்கியது. கலந்தாய்வில் பங்கேற்குமாறு 1,261 மாணவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இதில் 638 பேர் மட்டுமே கலந்தாய்வில் பங்கேற்றனர். அரசு கல்லூரிகளில் 480 பேர், தனியார் கல்லூரிகளில் 143 பேர் என 623 பேர் கல்லூரிகளில் சேருவதற்கான அனுமதி கடிதத்தை பெற்றனர். 15 பேர் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளனர். 26-ம் தேதி வரை கலந்தாய்வு நடைபெற உள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி