மனிதநேயம் அகாடமியில் டிஎன்பிஎஸ்சி தேர்வுக்கு இலவச பயிற்சி - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 24, 2017

மனிதநேயம் அகாடமியில் டிஎன்பிஎஸ்சி தேர்வுக்கு இலவச பயிற்சி

மனிதநேய அறக்கட்டளை வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:சமுதாயம் மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள் படிக்க மனிதநேய அறக்கட்டளை மூலம் ஐஏஎஸ் அகாடமி தொடங்கப்பட்டு,
ஐஏஎஸ், ஐபிஎஸ் போன்ற தேர்வுகளுக்கு இலவச பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகின்றன.

மேலும் தமிழ்நாடுஅரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப்1, 2 போன்ற தேர்வுகளுக்கும் இலவச பயிற்சி அளிக்கப்படுகிறது. இதுவரை 2955-க்கும் மேற்பட்டோர் பல உயர் பதவிகளுக்கு தேர்ச்சி பெற்றுள்ளனர்.அதன் ஒரு பகுதியாக தமிழ்நாடு அரசு பணியாளர்தேர்வாணையம் நடத்தும் அனைத்து தேர்வுகளுக்கும் பயிற்சி பெற விரும்புவோருக்கு இலவச பயிற்சி வழங்கப்படவுள்ளது. இதில் கலந்துகொள்ள விரும்புவோர், பாஸ்போர்ட் அளவு புகைப்படத்துடன் சிஐடி நகர், முதல் பிரதான சாலையில் உள்ள மனிதநேய அறக்கட்டளை அலுவலகத்தில் ஞாயிற்றுக்கிழமை முதல் நேரில் பதிவு செய்ய வேண்டும். பிற மாவட்ட மாணவர்கள் www.saidais.com என்ற இணையதளத்திலும் பதிவு செய்து கொள்ளலாம். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

3 comments:

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி