கல்வித்துறை மேம்பாட்டு ஆலோசனைக் கூட்டத்திற்கு உதயசந்திரன் ஏன் அழைப்பு இல்லை? - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 14, 2017

கல்வித்துறை மேம்பாட்டு ஆலோசனைக் கூட்டத்திற்கு உதயசந்திரன் ஏன் அழைப்பு இல்லை?


கல்வித்துறை மேம்பாட்டு ஆலோசனைக் கூட்டத்திற்கு உதயசந்திரனுக்கு அழைப்பில்லை. அமைச்சர் செங்கோட்டையன் தலைமையில் சென்னையில் ஆலோசனை நடைபெற்று வருகிறது.
கல்வித்துறை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அனைவரும் ஆலோசனைக்கு அழைக்கப்பட்டனர். கலைத்திட்ட வடிவமைப்புக் குழு உறுப்பினர்களும் கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர். பள்ளி கல்வுத்துறை செயலாளர் உதய சந்திரனுக்கு மட்டும் அழைப்பு விடுக்கவில்லை.

உதயசந்திரன் ஏன் அழைப்பு இல்லை?

செங்கோட்டையனுடன் நடந்த மோதலால் இரு மாதமாக உதயசந்திரனுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. சில முறைகேடுகளுக்கு உதயசந்திரன் ஒத்துப் போகாததால் நெருக்கடி என புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. கல்வித்துறை முதன்மை செயலாளரை நியமித்து உதயசந்திரன் அதிகாரித்தை குறைத்தனர். முதன்மை செயலாளர் நியமிக்கப்பட்ட பிறகு கல்வித்துறையில் உதயசந்திரன் ஓரம்கட்டப்பட்டார்.

மாற்றம் கொண்டுவந்த உதயசந்திரன்

கல்வித்துறையில் முன்னேற்றகரமான பல மாற்றங்களை உதயசந்திரன் செய்தார். பிளஸ் ஒன் வகுப்புக்கு பொதுத்தேர்வை உதயசந்திரன் அறிமுகப்பத்தினார். நீட்டுக்கு ஏற்ப பாடத்திட்ட மாற்றம், ஸ்மார்ட் வகுப்புகளை கொண்டுவர முயன்றார். ஆசிரியர் பணியிட மாறுதலில் வெளிப்படைத் தன்மையை உதயசந்திரன் கடைப்பிடித்தவர்.


8 comments:

  1. a good officer will become a good politician, but politician will not become a good officer, tamilnadu's corrupt and fraud politician should thing it, they should support good officers

    ReplyDelete
  2. You can't expect what they don't have

    ReplyDelete
  3. You can't expect what they don't have

    ReplyDelete
  4. Nallavarkalai in the Ulagam nambathuda samy

    ReplyDelete
  5. This comment has been removed by the author.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி