BREAKING NEWS : ORIGINAL DRIVING LICENSE வைத்து இருக்க வேண்டிய அவசியமில்லை - சென்னை உயர்நீதிமன்றம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 1, 2017

BREAKING NEWS : ORIGINAL DRIVING LICENSE வைத்து இருக்க வேண்டிய அவசியமில்லை - சென்னை உயர்நீதிமன்றம்

வாகன ஓட்டுனர்கள் தங்களுடன் அசல் ஓட்டுனர் உரிமத்தை வைத்திருக்க வேண்டியது அவசியம் இல்லை என சென்னை உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. மோட்டார் வாகன சட்டப் பிரிவு 139-ன் படி ஓட்டுனர்கள் வாகனங்களை இயக்கும் போது, தங்களுடைய அசல் ஓட்டுனர் உரிமத்தை வைத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை என சென்னை உயர்நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.
மேலும் அசல் ஓட்டுநர் உரிமம் வைத்திருப்பது பல்வேறு குழப்பங்களை ஏற்படுத்தும் எனவும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. முன்னதாக அசல் வாகன ஓட்டுனர் உரிமம் வைத்திருக்க வேண்டும் என்ற உத்தரவை எதிர்த்து வழக்கு தொடரப்பட்டது. லாரி உரிமையாளர்கள் சம்மேளன தலைவர் சுகுமார் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தார். தமிழக அரசின் உத்தரவு மோட்டார் வாகன சட்டத்துக்கு எதிரானது என்று அந்த மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது. வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், மேற்கண்ட கருத்துக்களை தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இன்று முதல் வாகனம் ஓட்டிகள் தங்களது அசல் ஓட்டுனர் உரிமத்தை வைத்திருக்க வேண்டும். சோதனையின் போது அசல் ஓட்டுனர் உரிமம் இல்லாதவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசு உத்தரவிட்டது. மோட்டார் வாகன சட்டம் 1988- பிரிவு 3-ன்படி உரிய வாகன ஓட்டுனர் உரிமம் இல்லாமல் பொது இடத்தில் வாகனம் ஓட்ட கூடாது என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. தவறும் பட்சத்தில் அசல் ஓட்டுனர் உரிமம் இல்லாமல் வாகனம் ஓட்டுபவர்களுக்கு 3 மாத சிறை தண்டனை, அல்லது ரூ.500 அபராதம் விதிக்கப்படும் என அறிவித்தது. மேலும் போக்குவரத்து விதி மீறல்களில் ஈடுபடும் ஓட்டுனர்கள் உரிமம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது. அரசின் இந்த உத்தரவுக்கு பல்வேறு தரப்பிலும் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.

இந்நிலையில் போக்குவரத்து துறை காவலர்கள் மற்றும் அதிகாரிகள் தமிழகம் முழுவதும் வாகன சோதனை நடத்தி வருகிறார்கள். அசல் ஓட்டுனர் உரிமம் இல்லாமல் வாகனம் ஓட்டிய பலர் பிடிபட்டனர். அவர்களுக்கு போலீசார் ரூ.500 அபராதம் விதித்தனர். சென்னை நகரில் அண்ணாசாலை, பீச் ரோடு, பூந்தமல்லி நெடுஞ்சாலை, எழும்பூர், நுங்கம்பாக்கம், மயிலாப்பூர், பெரம்பூர் உள்ளிட்ட பல பகுதிகளில் ஆங்காங்கே போலீசார் வாகன சோதனை நடத்தி வருகின்றனர். 

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி