Flash News : ஓய்வுபெற்ற அரசு ஊழியர்களுக்கு ஓய்வூதியம் ஏன் தரவில்லை? தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி! (Update News) - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 15, 2017

Flash News : ஓய்வுபெற்ற அரசு ஊழியர்களுக்கு ஓய்வூதியம் ஏன் தரவில்லை? தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி! (Update News)

ஓய்வுபெற்ற அரசு ஊழியர்களுக்கு ஏன் ஓய்வூதியம் தரவில்லை என்பது குறித்து பதிலளிக்குமாறு அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அரசு ஊழியர்களின் போராட்டம் குறித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு நீதிபதி கிருபாகரன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது அரசு ஊழியர்களின் தங்களின் ஓய்வூதியத்திற்காகவே போராடுகின்றனர். இது நியாயமான கோரிக்கை தான் என்றார்.


அரசு ஊழியர்களின் கோரிக்கை நியாயமானது, ஆனால் போராடும் விதமே தவறானது. அரசு ஊழியர்களின் ஓய்வூதியத்தை ஏன் அரசு தரவில்லை. 2003க்குப் பிறகு அரசு ஊழியர்கள் எவ்வளவு பேர் ஓய்வுபெற்றனர் என்றுஅரசுக்கு சரமாரியாக கேள்வி எழுப்பினார்.

தன்பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தில் அரசு பங்களிப்பு தொகையை ஏன் செலுத்தவில்லை என்றும் நீதிபதி கேட்டார். மேலும் இது குறித்து அரசு திங்கட்கிழமைக்குள் பதில் தாக்கல் செய்யவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி