போட்டி தேர்வுகளை எதிர்கொள்ள 412 இடங்களில் பயிற்சி மையங்கள் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தொடங்கி வைத்தார் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 17, 2017

போட்டி தேர்வுகளை எதிர்கொள்ள 412 இடங்களில் பயிற்சி மையங்கள் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தொடங்கி வைத்தார்

எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். உள்ளிட்ட மருத்துவ படிப்பில் சேரதமிழகத்தில் நீட் என்ற நுழைவுத்தேர்வை மத்திய அரசுகொண்டுவந்தது.அதுபோல பிளஸ்-2 மாணவர்கள் உயர் கல்வி படிப்பில் சேர்ந்துபடிக்க மத்திய அரசு எந்த போட்டி தேர்வுகளை கொண்டுவந்தாலும்அந்த தேர்வுகளை எதிர்கொள்ள தமிழகத்தில் 412 பயிற்சிமையங்கள் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில்அமைக் கப்பட்டு உள்ளன.
இந்த பயிற்சி மைய தொடக்க விழா, பள்ளிக்கல்வித்துறையின்மேம்படுத்தப்பட்ட இணையதளம் தொடக்கவிழா, மாவட்ட கல்விஅதிகாரிகளுக்கு பணி ஆணை வழங்கும் விழா ஆகியவைசென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு விழாநூலகத்தில் நேற்று நடைபெற்றது.

விழாவில் பள்ளிகல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன்கலந்துகொண்டு இணையதளத்தையும், பயிற்சி மையங்களையும்தொடங்கிவைத்தார். மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு பணி நியமனஆணைகளையும் வழங்கினார்.அப்போது அவர் பேசியதாவது:-பள்ளி கல்வித்துறையில் பல மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.பள்ளிகல்வித்துறையில் மேம்படுத்தப்பட்ட இணையதளம்( www.tnschools.gov.in) திறக்கப்பட்டுள்ளது.

அந்தஇணையதளத்தின்மூலம் தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிகளின் நடவடிக்கைகளைஅறியமுடியும். மத்திய அரசு கொண்டு வந்துள்ள நீட் தேர்வு,வரக்கூடிய போட்டிதேர்வுகளை, மாணவர்கள் எதிர்கொள்ளவட்டார அளவில் அரசு பள்ளிகளில் பயிற்சி மையங்கள்ஏற்படுத்தப்பட்டுள்ளன.இந்த பயிற்சி மையங்களில் பயிற்சி பெற விரும்பும் மாணவர்கள்பள்ளிக்கூட தலைமை ஆசிரியர்கள் வழியாக பள்ளிக்கல்வித்துறைஇணையதளத்தை நாடி அதில் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பித்தஉடன் விண்ணப்பித்தற்கான அடையாள சீட்டு கிடைக்கும்.அதைக்கொண்டு எந்த பயிற்சி மையத்தில் பயிற்சி பெறவிரும்புகிறார்களோ அந்த மையத்திற்கு செல்லலாம். தினமும்பள்ளிக்கூடம் விட்ட பிறகு மாலையில் இந்த பயிற்சி அளிக்கப்படும்.சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் காலையிலும், மாலையிலும் பயிற்சிஅளிக்கப்படும். மொத்தம் 412 பயிற்சி மையங்களில் இந்த பயிற்சிஅளிக்கப்பட உள்ளது.இதற்காக ஆசிரியர்கள் ஆந்திரா சென்று பயிற்சி பெறுகிறார்கள்.அவர்கள் தமிழகத்திற்கு வந்ததும் 3 ஆயிரம் ஆசிரியர்களுக்கு 10நாட்கள் பயிற்சி அளிப்பார்கள். பயிற்சி இந்த மாத இறுதிக்குள்தொடங்கப்படும்.இவ்வாறு அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் தெரிவித்தார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி