தங்கம் வென்ற பழநி மாணவர்கள் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 11, 2017

தங்கம் வென்ற பழநி மாணவர்கள்


தெற்கு ஆசிய அளவிலான சிலம்பம் போட்டியில், திண்டுக்கல் மாவட்டம், பழநியை சேர்ந்த மாணவர்கள் தங்கம், வெள்ளிப் பதக்கங்கள் வென்று சாதனை படைத்துள்ளனர்.
இலங்கையில் கடந்த அக்.3 முதல் அக்.5 வரை தெற்கு ஆசிய அளவிலான சிலம்பம் போட்டிகள் நடந்தன. இந்தியா, இலங்கை, பங்களாதேஷ், பாகிஸ்தான் நாடுகளின் வீரர்கள் பங்கேற்றனர்.

இதில், இந்திய தற்காப்புக் கலை மற்றும் விளையாட்டுக் கழகம் சார்பில் பங்கேற்ற பழநி, மஞ்சநாயக்கன்பட்டி உயர்நிலைப் பள்ளி மாணவர் ராஜசேகரன்,11, சுருள்வாள் வீச்சு, கம்புச் சண்டை ஆகியவற்றில் 2 தங்கப்பதக்கம், ஆயக்குடி ராஜீ நர்சரி மற்றும் தொடக்கப்பள்ளி மாணவர்ஆறுமுகம்,7, ஒற்றைக் கம்புவீச்சு, வேல்கம்பு ஆகியவற்றில் இரண்டு தங்கமும், இரட்டைக்கம்புவீச்சு, கம்புச்சண்டையில் இரண்டு வெள்ளிப் பதக்கமும் பெற்றுள்ளனர்.பழநி, காரமடையை சேர்ந்த கோவை கல்லுாரியின் எம்.பி.ஏ., மாணவர் பிரபு,24, கம்புச் சண்டை, ஒற்றைக் கம்புவீச்சு, வேல்கம்பு வீச்சு ஆகியவற்றில் மூன்று தங்கம் வென்றுள்ளார்.அவர்களை பயிற்சியாளர் வேங்கைநாதன், பள்ளிஆசிரியர்கள், மாணவர்கள் பாராட்டினர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி