தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் கவிதை, கட்டுரை, பேச்சுப் போட்டிகள் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 7, 2017

தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் கவிதை, கட்டுரை, பேச்சுப் போட்டிகள்

தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் 11, 12- ஆம் வகுப்பு மாணவர்களுக்கு சென்னை மாவட்ட அளவில் கவிதை, கட்டுரை, பேச்சுப் போட்டிகள் வெள்ளிக்கிழமை (அக்.6) நடைபெற்றன.
சென்னை எழும்பூரில் உள்ள மாநில பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற இப்போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு முதல் பரிசு ரூ.10 ஆயிரமும், இரண்டாம் பரிசு ரூ.7 ஆயிரமும், மூன்றாம் பரிசு ரூ,5 ஆயிரமும் வழங்கப்பட்டன. வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. தமிழ் வளர்ச்சி இயக்குநர் கோ.விசயராகவன், மொழிபெயர்ப்பாளர் ஆனைவாரி ஆனந்தன், புலவர் கி.த.பச்சையப்பன், பாக்கம் தமிழன், தமிழ் வளர்ச்சி கண்காணிப்பாளர் பவானி ஆகியோர் மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கினர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி