சோழவரம் அருகே மின்னல் தாக்கிய போது வீட்டினுள்ளே சார்ஜரில் இருந்த செல்போனில் வீடியோ படம் பார்த்துக் கொண்டிருந்த கல்லூரி மாணவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
திருவள்ளூர் மாவட்டம், சோழவரம் அருகே உள்ள நல்லூர், நாகாத்தம்மன் நகர், கலைஞர் கருணாநிதி தெருவைச் சேர்ந்தவர் சித்திரைவேல் மகன் ரஞ்சித்குமார்(21). இவர்,திருவள்ளூர் அருகே உள்ள தனியார் கல்லூரியில் பி.இ. படித்து வந்தார்.நேற்று முன்தினம் நள்ளிரவு, சார்ஜரில் போட்டபடி செல்போனில் வீடியோ பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது, நல்லூர் சுற்று வட்டாரப் பகுதியில் இடி மின்னலுடன் கனமழை பெய்து கொண்டிருந்தது.
இந்நிலையில், வீட்டின் வெளியே திடீரென மின்னல் தாக்கியது. அப்போது ஏற்பட்ட கதிர்வீச்சு ரஞ்சித்குமார் மீது பாய்ந்து மயங்கி விழுந்தார். அவரை செங்குன்றம் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள், அவர் மின்னல் தாக்கியதால் ஏற்பட்ட கதிர்வீச்சு காரணமாக உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.இதுகுறித்து சோழவரம் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
திருவள்ளூர் மாவட்டம், சோழவரம் அருகே உள்ள நல்லூர், நாகாத்தம்மன் நகர், கலைஞர் கருணாநிதி தெருவைச் சேர்ந்தவர் சித்திரைவேல் மகன் ரஞ்சித்குமார்(21). இவர்,திருவள்ளூர் அருகே உள்ள தனியார் கல்லூரியில் பி.இ. படித்து வந்தார்.நேற்று முன்தினம் நள்ளிரவு, சார்ஜரில் போட்டபடி செல்போனில் வீடியோ பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது, நல்லூர் சுற்று வட்டாரப் பகுதியில் இடி மின்னலுடன் கனமழை பெய்து கொண்டிருந்தது.
இந்நிலையில், வீட்டின் வெளியே திடீரென மின்னல் தாக்கியது. அப்போது ஏற்பட்ட கதிர்வீச்சு ரஞ்சித்குமார் மீது பாய்ந்து மயங்கி விழுந்தார். அவரை செங்குன்றம் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள், அவர் மின்னல் தாக்கியதால் ஏற்பட்ட கதிர்வீச்சு காரணமாக உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.இதுகுறித்து சோழவரம் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி