சென்னை பல்கலைக்கழகத்தின் தொலைதூர கல்வியில் சேர அவகாசம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 26, 2017

சென்னை பல்கலைக்கழகத்தின் தொலைதூர கல்வியில் சேர அவகாசம்

நடப்பு கல்வி ஆண்டில் தொலைதூரக் கல்வி படிப்புகளில் அக்டோபர் 31-ம் தேதி வரை சேரலாம் என சென்னை பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.இதுதொடர்பாக சென்னை பல்கலைக்கழக பதிவாளர் பேராசிரியர் இராம.சீனுவாசன் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
சென்னை பல்கலைக்கழக தொலைதூரக் கல்வி நிறுவனத்தில் 2017-18-ம் கல்வி ஆண்டுக்கான இளங்கலை, முதுகலை, தொழிற்கல்வி, டிப்ளமா மற்றும் சான்றிதழ் படிப்புகளில் மாணவர் சேர்க்கைக்கு கடைசி நாள் அக்டோபர் 31-ம் தேதி ஆகும்.தொலைதூரக் கல்வி திட்டத்தின்கீழ் வழங்கப்படும் பல்வேறு படிப்புகளில் சேர விரும்பும் மாணவர்கள், தொலைதூரக் கல்வி நிறுவனத்தில் இயங்கும் ஒற்றைச்சாளர மாணவர் சேர்க்கை மையத்தின் மூலம் சேரலாம். பல்கலைக்கழக வளாகத்தில் செயல்படும் இந்த மையம், சனி, ஞாயிறு உட்பட அனைத்து வேலை நாட்களிலும் செயல்படுகிறது. மேலும், மாணவர்கள் ஆன்லைன் மூலமாகவும் சேரலாம். இதற்கான இணையதள முகவரி:www.ideunom.ac.in

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி