நாளை பள்ளி உண்டா? அலுவலகம் உண்டா? - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 6, 2017

நாளை பள்ளி உண்டா? அலுவலகம் உண்டா?

JACTTO GEO வேலைநிறுத்த காலத்திற்கான ஈடுசெய்யும் பணி நாட்களை அனுமதிக்க தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

☀இது தூத்துக்குடி மாவட்டத்திற்கு மட்டுமானதே.


☀மேலும், உள்ளாட்சி & ஊரக வளர்ச்சித்துறைக்கு மட்டுமானதே.

☀இவ்வுத்தரவு பள்ளிகளுக்குப் பொருந்தாது.

☀ஆட்சியரின் உத்தரவை முழுமையாகப் பார்க்காமல் நுனிப்புல் மேய்ந்த கதையாக முழுமையற்ற தலைப்பு மட்டும் சமூக வலைத் தளங்களில் பரப்பப்பட்டுள்ளது.

☀நீங்கள் சார்ந்துள்ள மாவட்டத்தில் தங்களின் துறை உயர் அதிகாரிகளின் உத்தரவு வந்தால் மட்டும் அரசு ஊழியர்கள் பணிக்குச் செல்லவும்.

☀ஏனெனில் அரசு அலுவலகங்களில் சார்ந்த துறை உயர் அதிகாரியின் ஒப்புதல் இன்றி விடுமுறை நாட்களில் பணிபுரிய முடியாது.

☀பள்ளிகளைப் பொறுத்தவரையில், பொதுவான ஈடுசெய் வேலைநாட்களினை வழங்கிட வாய்ப்பு குறைவே.

☀எனவே, உடன் ஈடுசெய்ய விருப்பமுள்ளோர் கல்வி அதிகாரிகளுக்குத் தகவல் கொடுத்து பள்ளியைத் திறந்து கொள்ளவும்.

அல்லது

☀முறையான அறிவிப்பு கல்வித்துறை மாவட்ட / ஒன்றிய அலுவலர்களால் பிறப்பிக்கப்படும் வரை பொறுமைகாக்கவும்.

வாட்சப் பதிவுகளை வதந்திகளாக மாற்றிக் கொள்ள வேண்டாம்.

1 comment:

  1. மாற்றுத்திறனாளி ஆசிரியர் மற்றும் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்று பணிக்காகக் காத்திருக்கும் ஆசிரிய நண்பர்களுக்கு வேண்டுகோள்..!

    அக்-21 சனிக்கிழமை மதியம் 2-00 மணிக்கு சென்னை சைதாப்பேட்டையில் உள்ள சங்க அலுவலகத்தில் சிறப்புக் கூட்டம் நடைபெறும். பேரா.ராஜா அவர்களின் செல்பேசி எண்.7904659899
    -------------------------
    மாற்றுத்திறனாளிகள் என்ற அடிப்படையில் யாருடைய உரிமைகள் பாதிக்கப்பட்டாலும், தலையீடு செய்வது, போராட்டங்கள் நடத்துவது, தேவைப்பட்டால் வழக்குகளைத் தொடுப்பது.. என தொடர் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவது தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் சங்கம்(TARATDAC).

    அந்த வகையில் அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்களாக உள்ள மாற்றுத்திறனாளிகள் கோரிக்கைகளும் விதிவிலக்கல்ல.

    சமீபத்தில் முதுகலைப் பட்டதாரிஆசிரியர் பணி நியமனத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான இடங்களை நிரப்புவதில் ஆசிரியர் தேர்வு வாரியம் மற்றும் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை ஆகியன சில தவறுவகளை செய்து பாரபட்சம் காட்டின. அவைகளை எதிர்த்து தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம்(TARATDAC) தொடுத்த வழக்கில் வெற்றிகள் கிடைத்துள்ளன.

    வழக்கு இன்னும் முழுமையாக நிறைவடையாத நிலையில், இதுவரை வெளிவந்துள்ள அனைத்து இடைக்கால தீர்ப்புகள் குறித்தும் பெரும்பலான செய்தித்தாள்கள் நல்ல முறையில் செய்திகளை வெளியிட்டள்ளன. அவர்களுக்கு நமது நன்றிகள். சமூக வலைதளங்களிலும் செய்திகள் வெளியிட்டுள்ளோம். அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் சங்கத்தில் உறுப்பினர்களாக உள்ள ஆசிரியர் நண்பர்களுக்கும் மாவட்டக்குழுக்களின் சார்பில் ரிப்போர்ட் செய்யப்பட்டுள்ளது.

    மாற்றுத்திறனாளி ஆசிரியர்களுக்காக கோரிக்கை மாநாடு ஒன்றையும் நடத்தி, நாம் மேற்கொண்ட நடவடிக்கைகளை விளக்கினோம். ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்று பல ஆண்டுகளாக பணிக்காகக் காத்திருக்கும் மாற்றுத்திறனாளி ஆசிரியர்களுக்காகத் தனியான கூட்டம் சென்னையில் நடத்தி, தமிழக பள்ளிக்கல்வித்துறை செயலரை நேரில் சந்தித்து அவரின் நடவடிக்கைகளை கோரியுள்ளோம்.

    ஆனால், சங்கத்தில் உறுப்பினர் அல்லாத. அல்லது நமது வேண்டுகோள்களுக்கு எந்த வகையிலும் செவி சாய்க்காத இன்னும் பல 100-க்கணக்கான பேர் சங்கத்தின் மாநில தலைவர்களுக்கு தொடர்பு கொண்டு ஒவ்வொருவரும் தொலைபேசியிலேயே வழக்கு குறித்து விளக்கம் சொல்லச் சொல்கின்றனர்.

    இது சாத்தியமற்றது. சரியல்லவும்கூட என்பதையும் தெளிவுபடுத்தியுள்ளோம். TARATDAC மாவட்ட நிர்வாகிகளை தொடர்புகொள்ளச் சொன்னாலும் அவர்களை தொடர்புகொள்வதில்லை. அல்லது மாவட்டத்தில் மாநில தலைவர்கள் நேரடியாக வரும்போது சந்தித்து நேரில் விளக்குவோம் என்று தெரிவித்தாலும்கூட அதற்கும் ஒத்துழைப்பு தருவதில்லை.

    உதாரணமாக நேற்று(அக்-5) தருமபுரி போராட்டம் முடிந்த பின்னர் கிருஷ்ணகிரியில் மாலை 4 மணிக்கு சந்திக்கலாம் என்று நேரம் ஒதுக்கியும் தொலைபேசியில் தொடர்புகொண்ட 10-க்கும் மேற்பட்டோர் அங்கு வரவில்லை. எந்த அக்கறையும் காட்டவில்லை. மாறாக (TARATDAC) சங்க கிருஷ்ணகிரி மாவட்ட செயலர் பெரியசாமியிடம்.. "நீங்கள் கேட்டு வந்து சொல்லுங்கள்" என போனில் பேசியுள்ளனர். இதெல்லாம் எந்த விதத்தில் சரியாகும்.? என்பதை சம்பந்தப்பட்ட நண்பர்கள் சிந்திக்க வேண்டும்.

    எனவே, மாற்றுத்திறனாளி ஆசிரியர், ஆசிரியர் பணிக்காகக் காத்திருக்கும் தகுதித் தேர்வு தேர்ச்சி பெற்றுக் காத்திருக்கும் நண்பர்களுக்கு மீண்டும் ஒரு கூட்டத்தைக் கூட்டலாம் என இந்தப் பணிகளை கவனித்து வரும் எமது சங்க மாநில செயலாளர்
    பேரா. ராஜா கேட்டுள்ளார்.

    அதன்படி அக்-21 சனிக்கிழமை மதியம் 2-00 மணிக்கு சென்னை சைதாப்பேட்டையில் உள்ள சங்க அலுவலகத்தில் இந்தக் கூட்டம் நடைபெறும். சம்பந்தப்பட்ட அனைவரும் நேரில் வருமாறு கேட்டுக்கொள்கிறோம்.

    பேரா.ராஜா அவர்களின் செல்பேசி எண்.7904659899
    I'm Ganesh 9941170059

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி