தமிழக அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வுக்கு சட்ட பஞ்சாயத்து இயக்கம் எதிர்ப்பு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 10, 2017

தமிழக அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வுக்கு சட்ட பஞ்சாயத்து இயக்கம் எதிர்ப்பு.


7வது ஊதிய குழுபரிந்துரைகள் பற்றிஅமைச்சரவை கூடி முடிவுஎடுக்க போவதாகதகவல்கள் வந்த வண்ணம்இருக்கின்றன. அரசுஊழியர்களின் சம்பளஉயர்வு கோரிக்கையைஏற்க கூடாது என்று சட்டபஞ்சாயத்து இயக்கம்தமிழக முதலமைச்சர்மற்றும் துணைமுதலமைச்சருக்கு அவசரகடிதம் எழுதி உள்ளோம்.
நேரில் சந்தித்து விளக்கம்தர தயாராக உள்ளோம்என்பதையும்
தெரிவித்து உள்ளோம் எனசட்ட பஞ்சாயத்துஇயக்கத்தின் தலைவர்சிவ.இளங்கோகூறியுள்ளார்.

கடிதத்தின் விவரம்:

அரசு ஊழியர்கள் (JACTTO-GEO) 3 அம்சகோரிக்கைகளைவலியுறுத்தி கடந்த 3 மாதகாலமாக பல்வேறுபோராட்டங்களை நடத்திஅரசிற்கு நெருக்கடிஅளித்து வருகின்றனர். 7வது ஊதிய குழுவின்பரிந்துரைப்படி சம்பளத்தைஉயர்த்தவேண்டும் மற்றும்புது ஓய்வூதிய திட்டத்தைநிறுத்திவிட்டு பழையஓய்வூதிய திட்டத்தைஅமல்படுத்தவேண்டும்என்பது அவர்களுடையமுக்கியமானகோரிக்கைகள். அதுசம்மந்தமாக தமிழகஅமைச்சரவை நாளை கூடிமுடிவெடுக்க போவதாகசெய்திகள் வந்த வண்ணம்இருக்கின்றன. சட்டபஞ்சாயத்து இயக்கம்தன்னுடையகருத்துக்களையும்ஆலோசனைகளையும்இந்த கடிதம் மூலம்தெரிவிக்க விரும்புகிறது. (இது சம்மந்தமாகஏற்கனவே 18 செப்டம்பர்அன்று ஒரு கடிதம் எழுதிஇருந்தோம்.)

கட்டாயம் இல்லை:

மத்திய அரசின் நிதிநிலைமையை கருத்தில்கொண்டுபரிந்துரைக்கப்பட்டுள்ள7வது ஊதிய குழுவின்பரிந்துரைகளை ஏற்கவேண்டிய கட்டாயம் தமிழகஅரசிற்கு இல்லை. 1988இல்மத்திய அரசுஊழியர்களுக்குஇணையாக ஊதியம் தரவாய்மொழி உத்திரவாதம்மட்டும் தான் தமிழக அரசுதந்துள்ளது என்பதைகுறிப்பிட விரும்புகிறோம்.

வரி வருவாய் சரிவு:

தமிழக அரசின் சொந்தநிதி வருவாய் - 99590  கோடி

ஊழியர்களின் சம்பளம்  - 47000 கோடி

ஓய்வூதியம் - 21000 கோடி

அதாவது தமிழக அரசின்சொந்த வரி வருவாயில் 67%ஊழியர்களின் சம்பளம்மற்றும் ஓய்வூதியத்திற்குபோய் விடுவதால் வளர்ச்சிதிட்டங்களுக்கு நிதிபற்றாக்குறை நிலவிவருகிறது. இது தவிரமாநில அரசின் கடன் 4லட்சம் கோடியாகஇருக்கிறது. கடந்த நான்குவருடங்களாக தமிழகஅரசின் சொந்த நிதிவருவாயும் (மொத்தவருவாயில் 61%) குறைந்துகொண்டே வருகிறதுஎன்பதையும் சுட்டிக் காட்டவிரும்புகிறோம்

GST தாக்கம்:

தமிழக அரசின் ஜூலைமாத வரி வருவாய் - 5000கோடி

GST மூலம் கிடைத்தவருவாய்  - 2750 கோடி

Non GST வரி வருவாய் - 2250கோடி (மது மற்றும்பெட்ரோல்-டீசல் மூலம்கிடைத்த வருவாய்)

மறைந்த முதல்வர்ஜெயலலிதா அளித்தவாக்குறுதி படி தமிழக அரசுபடிப்படியாகமதுக்கடைகளை மூடவேண்டிய கட்டாயத்தில்உள்ளது. மத்திய அரசுபெட்ரோல்-டீசலை GSTக்குள்கொண்டுவர மும்முரமாகஇருக்கிறது. இதனால் Non GST வரி வருவாய்எதிர்காலத்தில் பாதியாக குறையும் பட்சத்தில் கடும்நிதி பற்றாக்குறை ஏற்படும்.

GSTயினால் கடும்நெருக்கடியில் இருக்கும்பஞ்சாப் அரசு, அரசுஊழியர்களுக்கு சம்பளம்தர முடியாமல் திணறிவருகிறது. ஜனவரி மாதம்முதல் தமிழக அரசிற்கும்இதே நிலை ஏற்பட வாய்ப்புஇருப்பதாக பொருளாதாரவல்லுநர்கள் கருத்துதெரிவிக்கின்றனர்.

FRBMA சட்டத்திற்கு எதிராகஅமையும்:

7வது ஊதிய குழுவின்பரிந்துரைகளை ஏற்றால்தமிழக அரசிற்கு 20000கோடி வரை கூடுதலாகசுமை ஏற்படும். இதனால்தமிழக அரசின்  Fiscal deficit-GSDP Ratio மீண்டும் 3% மேற்(3.34%) செல்லும்.  (Fiscal deficit-GSDP Ratio should not be above 3% as per the Fiscal responsibility and budget management act). 7வது ஊதியகுழுவை ஏற்றால் FRBMAசட்டத்திற்கு எதிராகஅமையும் என்பதைகோடிட்டு காட்ட இயக்கம்விரும்புகிறது.

வேலைநிறுத்தம் சட்டப்படிகுற்றம்:

Tamilnadu Government employees act 1973 (Clause 22) மற்றும்  ESMA சட்டப்படியும் அரசுஊழியர்கள்வேலைநிறுத்தத்தில்ஈடுபடுவது சட்டப்படிகுற்றம். TK ரங்கராஜன் vsதமிழக அரசு (2003) சுப்ரீம்கோர்ட் வழக்கிலும் அரசுஊழியர்கள்வேலைநிறுத்தத்தில் ஈடுபடஎந்தவித தார்மீகஉரிமையும் இல்லை என்றுஉச்சநீதிமன்றம்உத்தரவிட்டுருக்கிறது.சட்டத்தை மதிக்காமல் மீண்டும்வேலைநிறுத்தத்தில்ஈடுபட்டால் சட்டப்படிஅவர்களை வேலையில்இருந்து நீக்க முடியும்என்றாலும் அவர்களின்வாழ்வாதாரத்தை கருத்தில்கொண்டு இரண்டு பணிஉயர்வையும் சம்பளஉயர்வையும் (Promotion and Increment) ரத்து செய்யலாம்.

நீதிமன்றம் தலையிடமுடியாது:

சம்பள உயர்வு என்பதுஅரசின் நிதி நிலைமையைகருத்தில் கொண்டுஎடுக்கப்படும் கொள்கைமுடிவு என்பதால்நீதிமன்றம் இதில் தலையிடமுடியாது. நீதிமன்றம்தலையிட முற்பட்டால், அரசுஊழியர்களின் சம்பளஉயர்வு பற்றி முடிவுஎடுப்பது அரசினுடையஅதிகார எல்லைக்குள்உட்பட்டது, நீதிமன்றங்கள்எந்த உத்தரவையும்பிறப்பிக்க முடியாது என்றுநீதிமன்றத்தில்தெரிவித்துவிடலாம்.

செயற்திறனுக்கேற்பசம்பளம்:

மத்திய அரசின் ஊதியகுழுவின்பரிந்துரைகளையும் நிராகரித்துவிட்டுசெயற்திறனுக்கேற்பசம்பளம் (performance based appraisal system and people satisfaction index) என்றகொள்கையை தமிழக அரசுஅமல்படுத்திஇந்தியாவுக்கேமுன்னுதாரணமாகதிகழவேண்டும். சிறப்பாகசெயற்படும்ஊழியர்களுக்கு மத்தியஅரசின் ஊழியர்களை விட10% அதிகமாக ஊதியம்தரலாம்.

தற்பொழுதே,போக்குவரத்துஊழியர்களுக்கு தமிழகஅரசு சரியாக சம்பளம்தரமுடியாமல் இருப்பதாகசெய்திகள் வருகின்றது.ஆதலால் தற்போதுள்ளசூழ்நிலையில், அரசுஊழியர்களுக்கு சம்பளஉயர்வு சாத்தியமில்லை. 2% (தமிழக மக்கள்தொகையில்) அரசுஊழியர்களுக்கு (12 லட்சம்), 7வது ஊதிய குழுவின்பரிந்துரைப்படி சம்பளஉயர்வு கொடுத்தால்அனைத்து தமிழகமக்களும் (8 கோடி மக்கள்)பாதிக்கப்படுவார்கள். இதுஅரசு ஊழியர்களுக்குஎதிரான செயல் இல்லை,மக்களுக்கு ஆதரவானசெயல் என்பதை அரசுஊழியர்களுக்கு புரியவைத்து, அவர்கள்ஒப்புதலோடு இதைசெயல்படுத்த வேண்டும்.

அரசு சரியான முடிவுஎடுத்தால் சட்ட பஞ்சாயத்துஇயக்கம் அரசிற்குதுணையாக நின்று, மக்கள்இடையே விழிப்புணர்வைஏற்படுத்த அனைத்துமுயற்சிகளையும் எடுக்கும்.

இது சம்மந்தமாகவும்பென்ஷன் திட்டம் பற்றியும்நேரில் சந்தித்து விளக்கம்அளிக்க தயாராகஉள்ளோம். நேரில் சந்திக்கநேரம் ஒதுக்கி தருமாறுதாழ்மையுடன்கேட்டுக்கொள்கிறோம்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி