இலங்கை அருகே புதிய காற்றழுத்த தாழ்வு நிலை: வானிலை ஆய்வு மையம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 6, 2017

இலங்கை அருகே புதிய காற்றழுத்த தாழ்வு நிலை: வானிலை ஆய்வு மையம்

வங்கக்கடலில் இலங்கை அருகே புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலசந்திரன் தெரிவித்துள்ளார்.


இலங்கை அருகே தற்போது புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி இருப்பதால், சென்னை மற்றும் புதுச்சேரியில் இடைவெளி விட்டு விட்டு மழை பெய்யும். ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது. கடலூர் போன்ற டெல்டா மாவட்டங்களில் மிகக் கன மழைக்கு வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இன்னும் இரண்டு நாள்களில் சென்னை உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் மழை படிப்படியாக குறையும். தென்மேற்கு வங்ககடலில் உருவாகியிருந்த காற்றழுத்தாழ்வு நிலை மெல்ல மெல்ல நகர்ந்து வலுவிழந்து வருகின்றது.

வடகிழக்கு பருவமழை வழக்கமான 23 செ.மீட்டருக்கு பதில் 1 செமீ குறைந்து 22 செ.மீ பெய்துள்ளது. இன்றும், நாளையும் இடைவெளி விட்டு விட்டு மழை பெய்யும். ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. 

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி