குழந்தைகளின் பாதுகாப்பான சூழலுக்கு அனைத்து பள்ளிகளிலும் திடீர் ஆய்வு: அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 22, 2017

குழந்தைகளின் பாதுகாப்பான சூழலுக்கு அனைத்து பள்ளிகளிலும் திடீர் ஆய்வு: அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

நாட்டின் சொத்துக்களான குழந்தைகளுக்கு பாதுகாப்பான சூழலை வழங்க வேண்டியது அரசின் கடமை என தெரிவித்துள்ள உயர் நீதிமன்றம், பள்ளிகளில் உள்ள அடிப்படை வசதிகள் குறித்துகண்டறிய திடீர் ஆய்வு மேற்கொள்ள வேண்டுமென உத்தரவிட்டுள் ளது.
கடந்த 2004-ம் ஆண்டு கும்பகோணம் பள்ளி தீ விபத்து சம்பவத்தில் 94 குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக மாவட்ட கல்வி அதிகாரியாக பணிபுரிந்த பினாகபாணி என்பவர் கடந்த 2012-ல் பணி நீக்கம் செய்யப்பட்டார். இதை எதிர்த்து அவர் உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்.இந்த மனு மீதான விசாரணை நீதிபதி எம்.வி.முரளிதரன் முன்பாக நடந்தது. இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, ‘மனுதாரக்கு முன்பாக பணிபுரிந்த அதிகாரிதான் அப்பள்ளிக்கு அங்கீகாரம் வழங்கியுள்ளார். எனவே மனுதாரர் மீது எடுக்கப்பட்ட பணிநீக்க உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. எனவே இவரை ஓய்வுபெற்ற ஆசிரியராக கருதி அவருக்கு வழங்க வேண்டிய பணப்பலன்களை 8 வாரத்துக்குள் வழங்க வேண்டும்’ என உத்தரவிட்டார்.

மேலும் நாட்டின் சொத்துக்களான குழந்தைகளுக்கு கல்வியை பாதுகாப்பான முறையில் வழங்க வேண்டியது அரசின் கடமை. எனவே அனைத்துப் பள்ளிகளிலும் அடிப்படை வசதிகள் உள்ளனவா, அவை கல்வி கற்கும் சூழலும்பாதுகாப்பாக உள்ளதா என்பதை கண்டறிய அரசு அதிகாரிகள் முன்னறிவிப்பின்றி திடீர் ஆய்வு மேற்கொண்டு குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். அவ்வாறு விதிமுறைகளைகடைபிடிக்காத பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி