அனைவருக்கும் கல்வி திட்ட ஆசிரியர் பயிற்சி ஒத்தி வைப்பு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 19, 2017

அனைவருக்கும் கல்வி திட்ட ஆசிரியர் பயிற்சி ஒத்தி வைப்பு

பயிற்சி கட்டடங்கள் தயாராகாததால், அனைவருக்கும் கல்வி திட்டத்தில், நாளை முதல், 30 வரை, வழங்க திட்டமிடப்பட்டிருந்த பயிற்சிகள், தேதி குறிப்பிடப்படாமல் ஒத்தி வைக்கப்பட்டு உள்ளன.
அனைவருக்கும் கல்வி திட்டத்தில், 1 - 8ம் வகுப்பு வரையில், கல்வித் தரம் மேம்பட, பல்வேறு செயல்திட்டங்கள் அமல்படுத்தப்படுகின்றன. அதில், 5ம் வகுப்பு வரையான இடைநிலை ஆசிரியர்களுக்கும், 6 - 8ம் வகுப்புகளுக்கு பாடம் நடத்தும் பட்டதாரி ஆசிரியர்களுக்கும், தனித்தனியே பயிற்சிகள் வழங்கப்படுகின்றன.

இதில், நடப்பு கல்வியாண்டில், 'கற்றல் விளைவுகள்' என்றதலைப்பில், நாளை முதல், 30 வரையில், தொடக்க மற்றும் உயர் தொடக்க ஆசிரியர்களுக்கு, பயிற்சி வழங்க திட்டமிடப்பட்டு இருந்தது. இதற்காக, பயிற்சி கட்டடங்கள் தயார் செய்யப்பட்டன. இதில், தாமதம் ஏற்பட்டு உள்ளதால், பயிற்சி நடத்த முடியாத சூழல் உருவாகி உள்ளது.இதனால், பயிற்சிகள் அனைத்தும் தேதி குறிப்பிடப்படாமல் ஒத்தி வைக்கப்பட்டு உள்ளன.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி