தமிழ் வளர்ச்சிக்கு பாடுபடும் தமிழறிஞர்கள் மற்றும் தமிழுக்கு தொண்டாற்றுபவர்களை சிறப்பிக்கும் வகையில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா எண்ணற்ற விருதுகளை தோற்றுவித்துள்ளார். அந்த வகையில் திருவள்ளுவர் திருநாள் மற்றும் தமிழக அரசின் விருதுகள் வழங்கும் விழா வரும் ஜனவரி 15-ம் தேதி அரசு விழாவாக கொண்டாடப்பட உள்ளது.
இந்த விழாவில் திருவள்ளுவர் விருது, மகாகவி பாரதியார் விருது, பாவேந்தர் பாரதிதாசன் விருது, தமிழ்த்தென்றல் திருவிக விருது, கிஆபெ விசுவநாதம் விருது, பெருந்தலைவர் காமராஜர் விருது, பேரறிஞர் அண்ணா விருது ஆகியவை வழங்கப்பட உள்ளன.இந்த விருதுகளுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கான விண்ணப்ப படிவத்தை தமிழ் வளர்ச்சித் துறையின் www.tamilvalarchithurai.com என்ற வலைதளத்தில் இலவசமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
விண்ணப்பிப்பவர்கள் தன் விவரக் குறிப்புகளுடன் இரண்டு புகைப்படம், எழுதிய நூல்களின் பெயர்ப்பட்டியலுடன் அந்நூல்களில் ஒருபடி வீதம் ‘தமிழ் வளர்ச்சி இயக்குநர், தமிழ் வளர்ச்சி இயக்ககம், தமிழ் வளர்ச்சி வளாகம், தமிழ்ச் சாலை, எழும்பூர், சென்னை - 600008 (தொ.பே.எண்: 044-28190412, 28190413) என்ற முகவரிக்கு வரும் நவம்பர் 30-ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும்.இவ்வாறு அந்த செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
Hi, I'm a secondary grade panchayat union school teacher working at Madurai around 7 km from the center of the city. I need mutual transfer from Madurai to nearby Chennai (Kanchipuram dist & tiruvallur dist). If anyone has an intention to take mutual means pls contact me here, my no 8608267890.
ReplyDeleteஅனைவருக்கும் வணக்கம் நண்பர்களே!!!!
ReplyDelete2012 TET இல் 82-90 மதிப்பெண்கள் பெற்று தோல்வி அடைந்த சிலர் தொடுத்த வழக்கால் TET 2014,15,16 ஆகிய ஆண்டுகளில் நடத்தப்படவில்லை, இப்பொழுது TET 2013 இல் தேர்ச்சி பெற்றேன் எனக்கு முழு ஒதுக்கீடு வேண்டும் என்று முட்டாள் தனமாக போராடிக்கொண்டே இருந்தால் இனிமேல் TET தேர்வு நமது ஜென்மத்திற்கு வரவே வராது, சமயோசிதமாக செயல்படுங்கள் நண்பர்களே, இவர்களை போன்ற வீணர்களின் மயக்க பேச்சில் ஏமாந்து விடாதீர்கள், இவர்கள் தானும் படிக்காமல் மற்றவர்களையும் படிக்க விடாமல் இடையூறாக இருக்க கூடிய கொடிய கிருமிகள், அப்பொழுது சரியான மதிப்பெண்கள் பெறாத காரணத்தால் தோல்வி அடைந்தவர்கள், அவர்களை கேலி செய்வது அல்ல நமது நோக்கம், முயன்றால் முடியாதது எதுவும் இல்லை, ஒருமுறை தோற்றால் அடுத்த முறை முயன்று வென்று காட்ட வேண்டும், கிறுக்குத்தனமாக நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து அது ஐந்து அல்லது பத்து வருடங்களாக இழுத்து அடிக்கப்பட்டால் நாம் தான் வருத்தப்பட வேண்டும், TET என்பது ஒரு தகுதி தேர்வு மட்டுமே, அது இறுதி தேர்வு அன்று, அதன் பின் அரசின் கொள்கை முடிவுக்கு பின் சரியான முறையில் தரவாரியான மதிபெண்களின் (weightage) அடிப்படையில் தகுதியான அன்பர்களுக்கு வேலை வழங்கப்படும்,