பதவி உயர்வு சிக்கல்: டிச.,18ல் பள்ளிக்கல்வி ஊழியர்கள் போராட்டம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 11, 2017

பதவி உயர்வு சிக்கல்: டிச.,18ல் பள்ளிக்கல்வி ஊழியர்கள் போராட்டம்

பதவி உயர்வு நடவடிக்கையை மீண்டும் துவங்க வலியுறுத்தி, வரும், 18ல், பள்ளிக் கல்வி அலுவலக வளாகத்தில், போராட்டம் நடத்தப் போவதாக, பள்ளிக்கல்வி ஊழியர்கள் அறிவித்துள்ளனர்.
பள்ளிக்கல்வி நிர்வாக அலுவலர் சங்கத்தினர், மாநில செயற்குழு கூட்டம், மாநில தலைவர், நீதிமணி தலைமையில், அரியலுாரில், நேற்று நடந்தது.இதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் குறித்து, பொதுச்செயலர், சீனிவாசன் கூறியதாவது:ஏழாவது ஊதியக்குழு பரிந்துரைப்படி, ஜன., 2016 முதல், ஊதிய நிலுவைத் தொகையை அரசு, வழங்க வேண்டும். பள்ளிக்கல்வி அலுவலகங்களில், நிறுத்தி வைக்கப்பட்டுள்ள பதவி உயர்வுகளை, மீண்டும் வழங்க வேண்டும்.

கண்காணிப்பாளர், இருக்கைப்பணி கண்காணிப்பாளர் மற்றும் நேர்முக உதவியாளர் ஆகிய பணியிடங்களை, பதவி உயர்வில் நிரப்ப வேண்டும்.தாமதம் ஏற்பட்டால், வரும், 18ல், சென்னை, டி.பி.ஐ., வளாகத்தில், மாநில அளவில் உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படும்.இவ்வாறு அவர் பேசினார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி