டிசம்பர் 28 - திருச்சியில் TET நிபந்தனை ஆசிரியர்களின் சிறப்புக் கூட்டம். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 25, 2017

டிசம்பர் 28 - திருச்சியில் TET நிபந்தனை ஆசிரியர்களின் சிறப்புக் கூட்டம்.

கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் காரணமாக தமிழகத்தில் TET நிபந்தனைகளால் பாதிக்கப்பட்ட ஆசிரியர்களுக்கான சிறப்புக் கூட்டம் வரும் டிசம்பர் 28 ஆம் தேதி காலை 10 மணிக்கு திருச்சி மாவட்டத்தில் நடைபெற உள்ளது. இதில் அனைத்து மாவட்ட முதன்மை உறுப்பினர்களும் கலந்து கொள்ள உள்ளனர்.

TET நிபந்தனைகள் மூலம் பாதிக்கப்பட்ட பணியில் உள்ள சுமார் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட அரசு பள்ளி ஆசிரியர்கள், சிறுபான்மையினர் பள்ளிகள், அரசு உதவி பெறும் சிறுபான்மை அற்ற பள்ளி ஆசிரியர்களில் தற்போது அரசு பள்ளி ஆசிரியர்கள் மற்றும் சிறுபான்மையினர் பள்ளி ஆசிரியர்களுக்கு TET லிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. 

ஆயினும் இன்றுவரை சிறுபான்மையினர் அல்லாத பள்ளிகளில் முறையான கல்வி தகுதிகளுடன்  அரசு அனுமதி பெற்று பணியில் சேர்ந்து ஐந்து வருடங்களுக்கும் மேலாக பணி புரிந்து வரும் ஆசிரியர்களுக்கு TET லிருந்து விலக்கு அளிக்கப்படவில்லை.

இதன் மூலம் முறைப்படி கிடைக்க வேண்டிய பணிப்பாதுகாப்பு மற்றும் ஊதிய பலன்கள் தமிழக அரசிடம் இருந்து கிடைக்கவில்லை. 

எனவே TET நிபந்தனை ஆசிரியர்கள் சார்ந்த அடுத்த கட்ட நடவடிக்கைகள் சார்ந்த கூட்டம் திருச்சி மாவட்டத்தில் வரும் டிசம்பர் 28 வியாழக்கிழமை அன்று காலை 10 மணிக்கு நடத்த குழு முதன்மை உறுப்பினர்களால் ஏற்பாடுகள் செய்யபட்டுள்ளது.

ஆகவே TET நிபந்தனைகளால் பாதிக்கப்பட்ட அரசு உதவிபெறும் பள்ளி ஆசிரியர்கள் அனைவரும் கலந்து கொள்ள நிபந்தனை ஆசிரியர்கள் கூட்டமைப்பு அழைப்பு விடுத்துள்ளது.

🙏🏾

மேலும் தகவல்களுக்கு,

பூபதி : 9443826203
உதய குமார் : 9865021999
ராஜசேகர் : 9952660662
சந்துரு : 7708582806
சிவஞானம் : 9944246797

1 comment:

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி